Selvi Nithianandan

உயிர் நேயம் 549

ஒன்றேகுலம் ஒருவனே தேவன்
ஆன்றோர் அருளிய வாக்கு
ஒறறிவு தொடங்கி ஆறறிவு
மானிடமும் எப்போதும் காட்டனும்
அன்பு என்னும் நோக்கு
மகத்தான மாதமாய் புலர்ந்திட
மனித நேயத்தை விழித்தெழவைச்சு
மாண்புறவே மரம் செடி கொடி
புல்பூண்டு பறவை மிருகம் என
அழிக்காது அன்பாய் பேணி
உயிர்நேயம் காப்பது கடமையே
பிறருக்கு துன்பம் இழைக்காது
இயலாதவர்களின் கஷ்டத்தைப் போக்கியும்
இளகிய இதயமும் இரக்க சுபாவமும்
உறுதியான பல அரிய செயல்பாடும்
உயிர்நேயம் பலரைக் காக்குமே

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் அன்பில் உயர்ந்த பிறப்பிடம் ஆதரவில் பதிந்த சிறப்பிடம் இனிமை உதித்த தரிப்பிடம் ஈரேழு ஜென்மும் போற்றும் உலகத்தோரின்...

    Continue reading

    செல்வி நித்தியானந்தன் அன்னை தரணியில் தாய்க்கு நிகர்யாதும் உண்டோ தற்பெருமை இல்லா காத்திட்ட தெய்வம் அழகுபெற்ற வதனம் பழகுவதும் உறவாய் அன்பிலே இருப்பிடம் பண்பிலே மேலானவர் எட்டுமகவுகள்...

    Continue reading