Selvi Nithianandan

உயிர் நேயம் 549

ஒன்றேகுலம் ஒருவனே தேவன்
ஆன்றோர் அருளிய வாக்கு
ஒறறிவு தொடங்கி ஆறறிவு
மானிடமும் எப்போதும் காட்டனும்
அன்பு என்னும் நோக்கு
மகத்தான மாதமாய் புலர்ந்திட
மனித நேயத்தை விழித்தெழவைச்சு
மாண்புறவே மரம் செடி கொடி
புல்பூண்டு பறவை மிருகம் என
அழிக்காது அன்பாய் பேணி
உயிர்நேயம் காப்பது கடமையே
பிறருக்கு துன்பம் இழைக்காது
இயலாதவர்களின் கஷ்டத்தைப் போக்கியும்
இளகிய இதயமும் இரக்க சுபாவமும்
உறுதியான பல அரிய செயல்பாடும்
உயிர்நேயம் பலரைக் காக்குமே

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் கோடை கோடை வந்தாலே கடற்கரை மோகம் வாடை என்றாலும் எடுக்குதே தாகம் ஆடை மாற்றமும் பலரது தேகம் ஜாடை காட்டியே பூக்களின்...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் கவி இல_ 237 "வெற்றி" உழைப்பை உரமாக்கி முயற்சியை மூலதனமாக்கி முயல்றால் முற்றிலும் வெற்றி முயலும் உன்னை முந்தாது! அடைய வேண்டிய...

    Continue reading