Selvi Nithianandan

வந்திடும் மகிழ்வு

மாதத்தின் பன்னிரண்டில்
மார்கழி ஓன்றானாய்
மானிடரின் மனதுக்குள்
மகிழ்வின் வரவானாய்

விடியலின் அழகெல்லாம்
வெண்பனி தூறலாய்
வெள்ளை ஆடைபோர்தியே
வெளிச்சமாய் இருந்திடுவாய்

நத்தார் விடுமுறையும்
சிறுவர்களின் ஆரவாரமும்
பனிப்பொம்மை பந்துஎன
விளையாடி மகிழ்ந்திடுவர்

இல்லமும் உள்ளமும்
இரட்டிப்பு மகிழ்வுற
இறையருளும் கூடியே
இருந்திடனும் எந்நாளுமே

Nada Mohan
Author: Nada Mohan

    சிவாஜினி சிறிதரன் சந்த கவி இலக்கம் _ 217 "உறைபனி" பூம்பனி பூத்திருக்கு பாத்திருக்க மலருது பார்வைக்கு அழகு பாலரின் மனதுக்கு மகிழ்வு! காடுகள்...

    Continue reading