Selvi Nithianandan

வந்திடும் மகிழ்வு

மாதத்தின் பன்னிரண்டில்
மார்கழி ஓன்றானாய்
மானிடரின் மனதுக்குள்
மகிழ்வின் வரவானாய்

விடியலின் அழகெல்லாம்
வெண்பனி தூறலாய்
வெள்ளை ஆடைபோர்தியே
வெளிச்சமாய் இருந்திடுவாய்

நத்தார் விடுமுறையும்
சிறுவர்களின் ஆரவாரமும்
பனிப்பொம்மை பந்துஎன
விளையாடி மகிழ்ந்திடுவர்

இல்லமும் உள்ளமும்
இரட்டிப்பு மகிழ்வுற
இறையருளும் கூடியே
இருந்திடனும் எந்நாளுமே

Nada Mohan
Author: Nada Mohan

    ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-09-2025 வாழ்க்கைப் பயணத்தில் வண்ணமாய் குதூகலம் நொடிப் பொழுதினிலே நெஞ்சினை மகிழ்விக்கும் குயிலின் பாட்டினிலே கடலின்...

    Continue reading

    செல்வி நித்தியானந்தன் குதூகலம் கோடை வந்தாலே கொண்டாட்டம்வந்திட ஆடையும் மாறியே அழகுடன் சேர்ந்திட ஜாடையாய்பூக்களும் அணியாய் மலர்ந்திட வாடையில்...

    Continue reading