தாங்கமுடியவில்லை..!!

தாங்கமுடியவில்லை பத்து நாட்கள் திருவிழா பரவசமாய் முடிவு பெற பக்தியுடன் சனங்களும் புடைசூழ்ந்து நிற்கவே காவடி கற்பூரச்சட்டி அணிவகுத்து செல்ல அம்மன் பவனிவர அரோகரா...

Continue reading

Selvi Nithianandan

பொங்கலோ பொங்கல்

விளைந்தபயிர் கதிரிலே
விடியற்காலை முற்றத்திலே
வண்ணகோல வாசலிலே
வனப்பான பொங்கல்

மாவிலை தென்னை
தோரணங்கள் கட்டியே
புதியபானை புத்தரிசி
புதுமையான பொங்கல்

முக்கனிகள் படைத்து
முடிவுவரை இருந்து
பட்டாடை பட்டாசு
பந்தம்கூடி பொங்கல்

பொன்விளைந்த பூமியிலே
பொன்போன்ற கதிரவனும்
உணவழித்த உழவனாம்
உண்மைநன்றி சொல்லியே

தித்திப்பாய் பொங்கிடுவோம்

Nada Mohan
Author: Nada Mohan