Selvi Nithianandan

பொங்கலோ பொங்கல்

விளைந்தபயிர் கதிரிலே
விடியற்காலை முற்றத்திலே
வண்ணகோல வாசலிலே
வனப்பான பொங்கல்

மாவிலை தென்னை
தோரணங்கள் கட்டியே
புதியபானை புத்தரிசி
புதுமையான பொங்கல்

முக்கனிகள் படைத்து
முடிவுவரை இருந்து
பட்டாடை பட்டாசு
பந்தம்கூடி பொங்கல்

பொன்விளைந்த பூமியிலே
பொன்போன்ற கதிரவனும்
உணவழித்த உழவனாம்
உண்மைநன்றி சொல்லியே

தித்திப்பாய் பொங்கிடுவோம்

Nada Mohan
Author: Nada Mohan

    சிவாஜினி சிறிதரன் சந்த கவி இலக்கம் 224 "பெண்ணே" அன்புக்கு அதிபதி பண்புக்கு இலக்கணம் பாசத்தில் வரும் நேசம் பற்றுணர் வில் ஈகம்! என் நெஞ்சில்...

    Continue reading