நட்பென்றாலே……..

ரஜனி அன்ரன் (B.A) நட்பென்றாலே.... 30.07.2026 எங்கிருந்தோ வந்த சொந்தம் எந்தஎதிர்பார்ப்பும் இல்லாப் பந்தம் இரத்தபந்தம் இல்லாஉறவு இருளில்...

Continue reading

Selvi Nithianandan

பொங்கலோ பொங்கல்

விளைந்தபயிர் கதிரிலே
விடியற்காலை முற்றத்திலே
வண்ணகோல வாசலிலே
வனப்பான பொங்கல்

மாவிலை தென்னை
தோரணங்கள் கட்டியே
புதியபானை புத்தரிசி
புதுமையான பொங்கல்

முக்கனிகள் படைத்து
முடிவுவரை இருந்து
பட்டாடை பட்டாசு
பந்தம்கூடி பொங்கல்

பொன்விளைந்த பூமியிலே
பொன்போன்ற கதிரவனும்
உணவழித்த உழவனாம்
உண்மைநன்றி சொல்லியே

தித்திப்பாய் பொங்கிடுவோம்

Nada Mohan
Author: Nada Mohan