மாறியதே வாழ்க்கை

சக்தி சிறினிசங்கர் வாழ்க்கையின் ஓட்டத்தில் வரும் மாற்றங்கள் வாழ்ந்துதான் தீரவேண்டும் என்ற வீணவா நிலத்திலும் புலத்திலும் நிஜ...

Continue reading

அடையாளம்

நேவிஸ் பிலிப் கவி இல138 20/06/24

பாரெங்கும் மூண்ட போரால்
வன்முறை அடக்குமுறை
சிறகொடிந்த சிட்டுக்களாய்
அலையும் அபலைகள்

கலைந்த வாழ்வினால்
கசிந்திடும்அழுகுரல்
வறுமையும் கொடுமையும்
தாண்டவமாடுது

சொந்த வீடு நாடு
சொந்த பந்தமெவருமில்லை
உற்ற மண் துறந்து
முகவரிகள் தொலைத்து
அடையாளமேதுமில்லா
வெற்றுத் தாளாய்

தஞ்சம் புகு நாட்டினிலே
அகதி என்ற அந்தஸ்து
உரிமை ஏதும் கிடைத்திடுமா
மானுடத்தின் ஏக்கம்இது

நெஞ்சம் வலிக்குது
கண்கள் கலங்குது
அகதி என்ற அரச முத்திரையே
இவர்களின் அடையாளம்.

நன்றி வணக்கம்.

Nada Mohan
Author: Nada Mohan

செல்வி நித்தியானந்தன் இனிமை தேன் உவமையாய் தேவன் பாடலாய் தேன்மதுர குரலாய் தெய்வீக இராகமாய் சுவையாய் சாதமாய் தித்திப்பு இனிப்பாய் பற்பல...

Continue reading

சிவாஜினி சிறிதரன் கவி இல_238 "கோடை" கோடையில் வரும் வாடை காற்று வரவேற்பு கூறுது! பசுமை பாவடை விரிக்கும் பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்! ரோஜாவை ராஜாவாக வாத்து...

Continue reading