நட்பென்றாலே……..

ரஜனி அன்ரன் (B.A) நட்பென்றாலே.... 30.07.2026 எங்கிருந்தோ வந்த சொந்தம் எந்தஎதிர்பார்ப்பும் இல்லாப் பந்தம் இரத்தபந்தம் இல்லாஉறவு இருளில்...

Continue reading

கோடைகாலம்

சிவாஜினி சிறிதரன் சந்த கவி
இலக்கம் _195
“கோடைகாலம்”

கோடையில் வரும்
வாடைகாற்று வசந்தத்தை வரவேற்கிது
வசலில் நிற்கும் வாழையடி வாழை
வந்தனம் கூறுது !

வண்ண வண்ண பூக்கள்
கண்ணை பறிக்கிது
றோஜா என் வீட்டுராஜா
தேனீ பூக்களில் முட்டி
தேனீசை பாடுது!

வீட்டு தோட்டம்
விதம் விதமாய் காய்கறிகள்
நாற்று போட்ட கீரை
நறுமணத்துடன் சமையல்!

சின்ன வெங்காயம்
என்னை பாத்து
புன்சிரிப்புடன் பூத்திருக்கு
காத்திருந்து
கைபிடி கட்டினார் கணவர்!

முற்றத்து வெயில் முதுகில சுடுகிது
முழுநிலா பாத்து மகிழும் காலம்!

கோடை வந்தால்
கூதுகலத்திற்கு பஞ்சம்
இல்லை
புகுந்த வீட்டில் புன்னகை அரசியாய்
பூத்திருந்தார் என்புகுந்த வீட்டு அம்மா
உறவுகள் கூடி உறவாடி
மகிழ்ந்தோம்!

வணக்கம்
சிவாஜினி சிறிதரன்
12.07.25

Nada Mohan
Author: Nada Mohan