கோடைகாலம்

சிவாஜினி சிறிதரன் சந்த கவி
இலக்கம் _195
“கோடைகாலம்”

கோடையில் வரும்
வாடைகாற்று வசந்தத்தை வரவேற்கிது
வசலில் நிற்கும் வாழையடி வாழை
வந்தனம் கூறுது !

வண்ண வண்ண பூக்கள்
கண்ணை பறிக்கிது
றோஜா என் வீட்டுராஜா
தேனீ பூக்களில் முட்டி
தேனீசை பாடுது!

வீட்டு தோட்டம்
விதம் விதமாய் காய்கறிகள்
நாற்று போட்ட கீரை
நறுமணத்துடன் சமையல்!

சின்ன வெங்காயம்
என்னை பாத்து
புன்சிரிப்புடன் பூத்திருக்கு
காத்திருந்து
கைபிடி கட்டினார் கணவர்!

முற்றத்து வெயில் முதுகில சுடுகிது
முழுநிலா பாத்து மகிழும் காலம்!

கோடை வந்தால்
கூதுகலத்திற்கு பஞ்சம்
இல்லை
புகுந்த வீட்டில் புன்னகை அரசியாய்
பூத்திருந்தார் என்புகுந்த வீட்டு அம்மா
உறவுகள் கூடி உறவாடி
மகிழ்ந்தோம்!

வணக்கம்
சிவாஜினி சிறிதரன்
12.07.25

Nada Mohan
Author: Nada Mohan

ராணி சம்பந்தர் வாழ்த்துகள் விதம்விதம் ஒவ்வொன்றும் பதந்தரும் அவ்வப்போ அள்ளி வீசும் சொற்களில் அர்த்தங்கள் நேசமுடன் பொங்கிடுமே திருமணம் ,தீபாவளி ,...

Continue reading

செல்வி நித்தியானந்தன் வாழ்த்து தமிழரின் பண்பாடு வாழ்த்தாக வந்திடும் தரணியே போற்றியே சிறப்பாக மிளிர்ந்திடும் தைபிறப்பு வாழ்த்தே வந்திடும் ஆரம்பம் வஞ்சித்து...

Continue reading