மாறியதே வாழ்க்கை

சக்தி சிறினிசங்கர் வாழ்க்கையின் ஓட்டத்தில் வரும் மாற்றங்கள் வாழ்ந்துதான் தீரவேண்டும் என்ற வீணவா நிலத்திலும் புலத்திலும் நிஜ...

Continue reading

அடையாளம்

சிவருபன் சர்வேஸ்வரி

அடையாளம்

அடையும் குறிக்கோள் இலட்சிய நோக்கு
அடைமானம் வைத்தும் அகதிகள் ஆயினர்
உடமையை வைத்தும் உறவுகளை விட்டும்
கடமையே பெரிதென
எண்ணியநோக்கால் அகதிகள்

அடையாளப் படுத்தவும் ஆளறிவுச் சான்றிதழ்
ஒப்பந்தச் சீட்டிலே உரிமையும் கோரல்
ஓடி ஓடி உழைத்து நின்றாலும் கண்டதும் என்னவோ
புலம்பெயர் அகதிகள் என்ற பட்டமே

வல்லவன் பம்பரம் வரம்பிலே ஆடினாலும்
சாதனை செய்துமே ஏட்டிலே பதித்தாலும்
வாதம் புரிந்து வசதிகள் பெற்றாலும்
ஞாலத்தில் பொறிக்கும் அடையாளம் அகதிதானே
உலகத் தமிழர் வரிசையில் என்றும்
உழைக்கும் கரங்கள் உயர்ந்து நின்றாலும்
காட்டும் முயற்சி தீவிரம் அடைந்தாலும்
உன்னதமாக அடையாளம் பெற்றது வரமோ
சிவருபன் சர்வேஸ்வரி

Nada Mohan
Author: Nada Mohan

செல்வி நித்தியானந்தன் இனிமை தேன் உவமையாய் தேவன் பாடலாய் தேன்மதுர குரலாய் தெய்வீக இராகமாய் சுவையாய் சாதமாய் தித்திப்பு இனிப்பாய் பற்பல...

Continue reading

சிவாஜினி சிறிதரன் கவி இல_238 "கோடை" கோடையில் வரும் வாடை காற்று வரவேற்பு கூறுது! பசுமை பாவடை விரிக்கும் பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்! ரோஜாவை ராஜாவாக வாத்து...

Continue reading