அட என்னடா பொல்லாத வாழ்க்கை

ஜெயம் தங்கராஜா

விருப்புத்தலைப்பாக

கவி 737

அட என்னடா பொல்லாத வாழ்க்கை

எல்லாமே சிலகாலம் தான்
இதை அறிந்தும் அறியாது நகர்கின்றது இந்தக் கோலந்தான்
விதியும் வேடிக்கையாக நடப்பவற்றை மறைத்து ஆட்டிப்படைக்கின்றது
போதாது இதுவென சில மனிதரால் துன்பமும் ஊட்டப்படுகின்றது

தாங்கி நடாத்தும் இளமையும் கடைசியில் கைவிட்டுவிடும்
கட்டியணைத்த உறவும் எட்டவே விட்டுப் போய்விடும்
ஒட்டியிருக்கும் உடலுடன் என்ற உயிரும் சொல்லாமல் வெளியேறிவிடும்

அட இதுவென்னடா பொல்லாத பூலோக வாழ்க்கை

புன்னகையைத் துரத்தி வலிகளின் நுழைவு
நிசம் என நினைத்தவைகள் நிழலென விழைவு
கண்ணீர் துளிகளை துணையாக்கிய வெறுமை நிலை
இதுதானே இந்த அறியாத வாழ்வின் இறுதிநிலை

மனதுடன் தொடர்பில்லாத வெளிவேட உறவுநிலை
மாறினாலும் மாறிமாறி ஏற்பட்டுக்கொள்ளும் காயங்கள்
கலங்கும் மனமோ குரூரமானவர்க்குள் நிம்மதியைத்தேடி
சரிசெய்ய முடியாதே நசுங்கிப்போன வாழ்க்கை

சிலரை இங்கே பழகியும் சரியாகப் புரியமுடியவில்லை
பலரின் மனதின் கொள்ளளவை எள்ளளவும் அறியமுடியவில்லை
பாலெது கள்ளெது என்பதை அருந்திப்பார்க்காது தெரியாது
உண்மையாக இருப்பவர்களிங்கே விரல்விட்டு எண்ணக்கூடிய கொஞ்சப்பேரே

விரும்பிய வாழ்கை எப்போதுதான் வரும்
தேடும்போது கிடைக்கவில்லை தேடாதபோதா கிடைக்கப்போகின்றது
இன்பத்தை உணர்ந்ததைவிட வலிகளை உணர்த்திடவா இந்த வாழ்க்கை
அழகாய் அமையாவிடினும் அமைந்ததை அழகாக்கிய நடிப்பான விந்தை வாழ்க்கையிது

ஜெயம்
08-08-2024

Nada Mohan
Author: Nada Mohan

செல்வி நித்தியானந்தன் கோடை கோடை வந்தாலே கடற்கரை மோகம் வாடை என்றாலும் எடுக்குதே தாகம் ஆடை மாற்றமும் பலரது தேகம் ஜாடை காட்டியே பூக்களின்...

Continue reading

சிவாஜினி சிறிதரன் கவி இல_ 237 "வெற்றி" உழைப்பை உரமாக்கி முயற்சியை மூலதனமாக்கி முயல்றால் முற்றிலும் வெற்றி முயலும் உன்னை முந்தாது! அடைய வேண்டிய...

Continue reading