மீண்டாலும் துயரமே

செல்வி நித்தியானந்தன் மீண்டாலும் துயரமே

பிறப்பு இறப்பு இறைவனின் நியதி
பிரிவு வந்தாலே அதுவும் உறுதி
பின்னிப் பிணைந்திடும் இறப்பின் விதி
பிளவு பட்டதே பணத்தின் சதியே

முத்தான பிள்ளைகள் மூன்றென உண்டு
முக்கோண வடிவம்போல் செய்கை கண்டு
முற்றிலும் மாறியதோ பணத்தாசை கொண்டு
முட்டியே மோதியும் மகவுகள் நிண்டு

உறவு என்னும் பாசம் அற்றுப் போகுது
உண்மை வேசம் இப்போ தெரியுது
உலகில் மானிடம் பலதாய் புரியுது
பிரிவும் எனக்குள் படிப்பினை தருகுது

Nada Mohan
Author: Nada Mohan

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-09-2025 வாழ்க்கைப் பயணத்தில் வண்ணமாய் குதூகலம் நொடிப் பொழுதினிலே நெஞ்சினை மகிழ்விக்கும் குயிலின் பாட்டினிலே கடலின்...

Continue reading

செல்வி நித்தியானந்தன் குதூகலம் கோடை வந்தாலே கொண்டாட்டம்வந்திட ஆடையும் மாறியே அழகுடன் சேர்ந்திட ஜாடையாய்பூக்களும் அணியாய் மலர்ந்திட வாடையில்...

Continue reading