நட்பென்றாலே……..

ரஜனி அன்ரன் (B.A) நட்பென்றாலே.... 30.07.2026 எங்கிருந்தோ வந்த சொந்தம் எந்தஎதிர்பார்ப்பும் இல்லாப் பந்தம் இரத்தபந்தம் இல்லாஉறவு இருளில்...

Continue reading

மீண்டாலும் துயரமே

செல்வி நித்தியானந்தன் மீண்டாலும் துயரமே

பிறப்பு இறப்பு இறைவனின் நியதி
பிரிவு வந்தாலே அதுவும் உறுதி
பின்னிப் பிணைந்திடும் இறப்பின் விதி
பிளவு பட்டதே பணத்தின் சதியே

முத்தான பிள்ளைகள் மூன்றென உண்டு
முக்கோண வடிவம்போல் செய்கை கண்டு
முற்றிலும் மாறியதோ பணத்தாசை கொண்டு
முட்டியே மோதியும் மகவுகள் நிண்டு

உறவு என்னும் பாசம் அற்றுப் போகுது
உண்மை வேசம் இப்போ தெரியுது
உலகில் மானிடம் பலதாய் புரியுது
பிரிவும் எனக்குள் படிப்பினை தருகுது

Nada Mohan
Author: Nada Mohan