மீண்டாலும் துயரமே

செல்வி நித்தியானந்தன் மீண்டாலும் துயரமே

பிறப்பு இறப்பு இறைவனின் நியதி
பிரிவு வந்தாலே அதுவும் உறுதி
பின்னிப் பிணைந்திடும் இறப்பின் விதி
பிளவு பட்டதே பணத்தின் சதியே

முத்தான பிள்ளைகள் மூன்றென உண்டு
முக்கோண வடிவம்போல் செய்கை கண்டு
முற்றிலும் மாறியதோ பணத்தாசை கொண்டு
முட்டியே மோதியும் மகவுகள் நிண்டு

உறவு என்னும் பாசம் அற்றுப் போகுது
உண்மை வேசம் இப்போ தெரியுது
உலகில் மானிடம் பலதாய் புரியுது
பிரிவும் எனக்குள் படிப்பினை தருகுது

Nada Mohan
Author: Nada Mohan

செல்வி நித்தியானந்தன் கோடை கோடை வந்தாலே கடற்கரை மோகம் வாடை என்றாலும் எடுக்குதே தாகம் ஆடை மாற்றமும் பலரது தேகம் ஜாடை காட்டியே பூக்களின்...

Continue reading

சிவாஜினி சிறிதரன் கவி இல_ 237 "வெற்றி" உழைப்பை உரமாக்கி முயற்சியை மூலதனமாக்கி முயல்றால் முற்றிலும் வெற்றி முயலும் உன்னை முந்தாது! அடைய வேண்டிய...

Continue reading