கனவுப் பயணம்

சக்தி சிறினிசங்கர் விழி மூடித் தூங்குகையில்பயணிக்கின்றேன் தொலைதூரம் வழிநெடுக வயல்வெளிகள் வயல்வெளி யாவும் பச்சைப் பசேலென விரிந்து கண்களைக்...

Continue reading

கனவுப்பயணம்……

ரஜனி அன்ரன் (B.A) ....கனவுப்பயணம்..... 07.05.2026 கற்பனைச் சிறகைவிரித்து கனவுகளில் மிதந்து எழுத்துக்களின் தோப்பில் தொலைந்து எண்ணங்களின்...

Continue reading

அன்னைக்கு நிகருண்டோ அவனியிலே

அன்னைக்கு நிகருண்டோ அவனியிலே

ஜயிரண்டு திங்கள் ஆனந்தமாய் சுமந்து

அயராது எமக்கு அமுதமுலை கொடுத்து

அன்பினாலே அகம்மலர அணைத்து ஆரத்தழுவி

இப்புவியில் எம்மை இனிதாய் வளர்த்ததாயே

அன்னைக்கு நிகரும் வேறுண்டோ பாரில்
நல்லவை சேரவும் நல்லறிவு தந்ததும்
சொற்சுவை காட்டியும் சுதந்திரமாக நிற்க்கவைத்தது

கற்கையை உணர்த்தியும் காலத்தில் நற்பணியுணர்த்தியும்

பொற்புடன் நடக்க வைத்த தெய்வமன்றோ

கோமாதா எங்கள் குலமாதாவை மறக்கலாமா

கருணையின் பிறப்பும் தாய்மையின் சிறப்பும்

தாலாட்டும் நிலையில் பாராட்ட வைத்தவள்
அன்னைக்கு நிகருண்டோ

அகலத்தில் வேறு தெய்வமும் உண்டோ

அவனியிலே அழகுடன்
அருட்கொடை ஆக்கியவள்

அலைமேவும் கலைமகளாய் அலைமகளாய் மலைமகளாக்கி

துயர்போக்கிய தாயவளின் செயல் திறனை

விலைகூறி விற்கலாமா
அவளிற்கு நிகருண்டோ

சர்வேஸ்வரி சிவருபன்

Nada Mohan
Author: Nada Mohan

செல்வி நித்தியானந்தன் வாயார வாழ்த்துகிறேன் மூன்று நூறுடன் ஜம்பதின் முகிழ்வு முத்தப்பாய் கிடைத்த அரியதொரு நிகழ்வு சந்தத்துடன் கவியும் சந்தோச...

Continue reading