பள்ளிப் பருவத்திலே-70

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 22-05-2025 பள்ளிப் பருவத்திலே புத்தகப் பையும் சீருடையும் புன்னகை கலந்த முகப்பொலிவும் எத்திசை பார்க்கிலும் தோழிகளும்...

Continue reading

அபிராமி கவிதாசன்

சந்தம் சிந்தும் சந்திப்புக்காக…

“உழவும் தொழிலும்”

உழவுக்கும் தொழிலுக்கும்
உரித்தில்லா தேசத்தில்
உரிமைக்குரல் ஒன்று
உருகுதே ஊமையாய்..

சுட்டமண் தேசத்தில்
சுகந்தமாம் இயற்கைவளம்
சுதந்திரமாய் விவசாயம்
சுவர்க்கமன்றோ தாய்நாடு..

ஆற்றுநீரல் நீராடி
ஆனந்தமாய் அரிசிகோலமிட்டு
ஆர்பரித்து ஆனந்தமாய்
ஆசிபெற்ற ஞாபகமும்
நெஞ்சோடு..

பச்சரிசி அறுவடையும்
பல்வகை காய்கனியும்
படையலிட்டு நன்றிகூறி
பகலவனுக்கு படைத்ததை
மறவேனோ…

இயற்கைக்கு நன்றிகூறும்
இந்நாளே பொன்னாளாம்
இல்லத்தில் செல்வம் பொங்க
இறைவா வணங்குகிறேன் ..

மிக்க மிக்க நன்றி 🙏
பாவை அண்ணா.

Nada Mohan
Author: Nada Mohan

    வசந்தா ஜெகதீசன் அறிவாலயம் அனலானதே .... காலத்தின் பெட்டகமே காவியத்தின் பொக்கிசமே கடைக்கழக நூல்களின் தேட்டத்து நூலகமே எண்ணற்ற பதிவுகளால் பூத்திருந்த பூஞ்சோலை காடையரின்...

    Continue reading