வரமாகும் வாய்ப்புக்களே

இரா.விஜயகௌரி
வரமாகும் வாய்ப்புக்கள் அவை
தடமாகும் செயல் தழுவின்
உரமாய் நாம் பயன்கொள்ளின்
உரைத்தெழுதும் நம் தடங்கள்

வாய்த்ததெல்லாம் வளமாகும்
உணர்திறனும் உரை மொழியும்
விரலிழைவில் வியப்பெழுதும்
நெய்தலிலே அழகெழுதும்

நம்மை நாம் வியந்தெழுவோம்
அகழ்ந்ததெல்லாம் அமிழ்தாகும்
சுவைத்தவர்கள் செழிப்புணர்வார்
சிந்தனைக்கும் செயல் தொடுக்கும்

காத்திருந்தால் கனவெழுதும்
கணம் தனையே பொருளாக்கி
விதைத்தெழுதும் பயிர்வளர்ச்சி
அறுவடையில் உணர்ந்தெழுவார்

வாய்ப்புக்கள் காத்திருப்பில்
நிலை கொள்ள வாய்ப்புமில்லை
வரமாக்க முனைப்பிருந்தால்
தினப்பொழுதெல்லாம் உழைத்தெழலாம்

Author:

சிவாஜினி சிறிதரன் கவி இல_238 "கோடை" கோடையில் வரும் வாடை காற்று வரவேற்பு கூறுது! பசுமை பாவடை விரிக்கும் பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்! ரோஜாவை ராஜாவாக வாத்து...

Continue reading