நட்பென்றாலே……..

ரஜனி அன்ரன் (B.A) நட்பென்றாலே.... 30.07.2026 எங்கிருந்தோ வந்த சொந்தம் எந்தஎதிர்பார்ப்பும் இல்லாப் பந்தம் இரத்தபந்தம் இல்லாஉறவு இருளில்...

Continue reading

வரமாகும் வாய்ப்புக்களே

இரா.விஜயகௌரி
வரமாகும் வாய்ப்புக்கள் அவை
தடமாகும் செயல் தழுவின்
உரமாய் நாம் பயன்கொள்ளின்
உரைத்தெழுதும் நம் தடங்கள்

வாய்த்ததெல்லாம் வளமாகும்
உணர்திறனும் உரை மொழியும்
விரலிழைவில் வியப்பெழுதும்
நெய்தலிலே அழகெழுதும்

நம்மை நாம் வியந்தெழுவோம்
அகழ்ந்ததெல்லாம் அமிழ்தாகும்
சுவைத்தவர்கள் செழிப்புணர்வார்
சிந்தனைக்கும் செயல் தொடுக்கும்

காத்திருந்தால் கனவெழுதும்
கணம் தனையே பொருளாக்கி
விதைத்தெழுதும் பயிர்வளர்ச்சி
அறுவடையில் உணர்ந்தெழுவார்

வாய்ப்புக்கள் காத்திருப்பில்
நிலை கொள்ள வாய்ப்புமில்லை
வரமாக்க முனைப்பிருந்தால்
தினப்பொழுதெல்லாம் உழைத்தெழலாம்

Author: