” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

வரமாகும் வாய்ப்புக்களே

இரா.விஜயகௌரி
வரமாகும் வாய்ப்புக்கள் அவை
தடமாகும் செயல் தழுவின்
உரமாய் நாம் பயன்கொள்ளின்
உரைத்தெழுதும் நம் தடங்கள்

வாய்த்ததெல்லாம் வளமாகும்
உணர்திறனும் உரை மொழியும்
விரலிழைவில் வியப்பெழுதும்
நெய்தலிலே அழகெழுதும்

நம்மை நாம் வியந்தெழுவோம்
அகழ்ந்ததெல்லாம் அமிழ்தாகும்
சுவைத்தவர்கள் செழிப்புணர்வார்
சிந்தனைக்கும் செயல் தொடுக்கும்

காத்திருந்தால் கனவெழுதும்
கணம் தனையே பொருளாக்கி
விதைத்தெழுதும் பயிர்வளர்ச்சி
அறுவடையில் உணர்ந்தெழுவார்

வாய்ப்புக்கள் காத்திருப்பில்
நிலை கொள்ள வாய்ப்புமில்லை
வரமாக்க முனைப்பிருந்தால்
தினப்பொழுதெல்லாம் உழைத்தெழலாம்

Author: