” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

ஆளுகின்றான் அடிபணிகின்றோம்..!!

வியாழன்கவி 2300!!

ஆளுகின்றான் அடிபணிகிறோம்!!

வாழுகின்ற வாழ்க்கையிலே
வழி நெடுக பயணிப்பான்
ஆளுகின்ற அழுத்தக்காரன்
வீழ்ந்திடுவான் உழைப்பாலே
சோம்பலென்று கிடந்தாலோ
தூரம் விட்டே சென்றிடுவான்
துணிந்து நிற்கும் மனங்களில்
விரல் பற்றி சேர்ந்திடுவான்..

வங்கிகளில் குடியிருப்பான்
இங்கிதமும் தெரிந்திடுவான்
உயர்த்தி வைத்து அழகெனவும்
உணர்த்தி விட்டு புகழெனவும்
உரைத்துவிட்டு அறமெனவும்
அகராதி சொல்லிடுவான்
அகந்தைக் காரன் மட்டுமல்ல
அன்பெழுதும் இரக்கக் காரன்…
சிவதர்சனி இரா
5/3/2026

Author: