” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

போரும் அழிவும்

ரஜனி அன்ரன் (B.A) “போரும் அழிவும்” 05.03.2026

போரும் அழிவும் பாருக்குகேடு
போரும் அழிவும் மரண ஊர்வலம்
வரலாற்றின் நிழலில் வல்லரசின் ஆட்டம்
வளைகுடாப் பகுதியைப் பிரளயமாக்குது
வான்பரப்பினை ஆளில்லாவிண்கலம் ஆக்கிரமிக்குது
நாகரீகம் தழைத்த புண்ணியபூமியில்
சதிகாரக் கும்பலின் அதிகாரவேட்டையில்
குருதியால் எழுதப்படுகிறது நாளையவரலாறு !

பாரசீகத்தின் பழம்பெரும் பெருமையும்
யூதகுலத்தின் மீண்டெழுந்த வலிமையும்
வல்லரசின் தலையீட்டில் மோதிக்கொள்ள
எண்ணைக் கிணறுகளும் பற்றியெரிய
சர்வதேசமும் பதற்றமாகுது சர்வநாசமும் அரங்கேறுதே !

ஏவுகணைகள் வானைப்பிளக்க
எதிர்காலக் கனவுகளும் சிதறிப்போக
அணுவாயுத அச்சத்தில் உலகம்உறைய
அமைதிதேடி அலைகிறதே இதயங்களும்
நாடுகளின் கெளரவப்போரில்
நசுங்கிப்போவது அப்பாவிகளின் உயிர்களே !