புத்தாண்டே வா -56

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 10-04-2025 புத்தாண்டே வா புதுமை பொலிவுடனே புலத்தில் நிம்மதியும் பூகோளத்தில் அமைதியும் சோகங்கள் விட்டு சொந்தங்கள் சேர்ந்து சொல்பேச்சு கேட்டு சொர்க்க...

Continue reading

இன்னமும் மாறவில்லை

நகுலா சிவநாதன் இன்னமும் மாறவில்லை காலநிலை இன்னமும் மாறவில்லை கடும் குளிரும் குறையவில்லை பாட்டு வெயிலும் பகலவன் ஒளியும் கூட்டுது...

Continue reading

அபிராமி கவிதாசன்

சந்தம் சிந்தும் சந்திப்புக்காக…

“உழவும் தொழிலும்”

உழவுக்கும் தொழிலுக்கும்
உரித்தில்லா தேசத்தில்
உரிமைக்குரல் ஒன்று
உருகுதே ஊமையாய்..

சுட்டமண் தேசத்தில்
சுகந்தமாம் இயற்கைவளம்
சுதந்திரமாய் விவசாயம்
சுவர்க்கமன்றோ தாய்நாடு..

ஆற்றுநீரல் நீராடி
ஆனந்தமாய் அரிசிகோலமிட்டு
ஆர்பரித்து ஆனந்தமாய்
ஆசிபெற்ற ஞாபகமும்
நெஞ்சோடு..

பச்சரிசி அறுவடையும்
பல்வகை காய்கனியும்
படையலிட்டு நன்றிகூறி
பகலவனுக்கு படைத்ததை
மறவேனோ…

இயற்கைக்கு நன்றிகூறும்
இந்நாளே பொன்னாளாம்
இல்லத்தில் செல்வம் பொங்க
இறைவா வணங்குகிறேன் ..

மிக்க மிக்க நன்றி 🙏
பாவை அண்ணா.

Nada Mohan
Author: Nada Mohan

    வஜிதா முஹம்மட் சந்திர நாட்காட்டி சரித்திர வழிகாட்டி புனிதப்பட்ட மாதம் புரையோடிய பாவத்தின் மன்னிப்பு நோன்பின்நேரம் இறைகட்டளையை நினைவூட்டி மனித...

    Continue reading