பாசத்தின் பகிர்வினிலே

பாசத்தின் பகிர்வினிலே பாசத்தின் பரிவினிலே பனியாய் உறைந்தேன நேசத்தின் ஊற்றினிலே நெகிழ்ந்து நின்றேனே வாசமுல்லை விரிந்தது...

Continue reading

பாசப்பகிர்வினிலே………!!

Shanthini Thuraiyarangan பாசம் வைத்து பயபக்தியாக வளர்த்து பார்போற்றி வாழ தன்வாழ்வை பணயம் வைக்கும் உருவே எம் அன்னை எத்தனை பிள்ளைகளானாலும் அத்தனை...

Continue reading

அபிராமி கவிதாசன்.

15.03.2022

சந்தம் சிந்தும் வாரம் -166
தலைப்பு !

“பிறந்தநாள் வாழ்த்துக்கவி”
(இளம் வள்ளுவன் கவித் ) 17.03.2022

தலைமகனே! என்
தவமகனே!/
என்றனை உயர்த்த வந்துதித்த திருமகனே!/
குலம் தழைக்க குலவிளக்கானாய் செல்லமே/
வாழ்வில் வசந்தம் வீசிடச் செய்தவனே!/
உனைவாழ்த்த அன்னையிவள் வார்த்தையின்றி அணைக்கின்றேன்/

அகவை ஒன்பதில் அகமகிழ்வாய் வாழ்த்துகிறோம்/

முத்தமிழால் நீயும் முத்திரை பதித்திடுவாய்/
வித்தைகள் பலகற்று விருட்சமாய் உயர்ந்திடுவாய்/
வள்ளுவப் பெருந்தகையின் கொள்ளும் பேரன்நீயென/
ஊருலகம் உன்னை வாழ்த்திட
வேண்டுமய்யா/

உள்ளம் கவர்ந்த வனாய் உத்தமனாய் வாழ்ந்திடுவாய்!/

பாமுகச் சிறுவரும் பண்புடை பெரியோரும்/
அன்புடன் அரவணைக்கும் மாமாக்கள் மாமிகள்/
அத்தனை உறவுகளும் ஆரத் தழுவியுனை
வாழ்த்தியே நிற்கின்றனர்//

சாதனை படைத்துமே கவித்துவன் நீயும்/
வித்தகனாய் பல்லாண்டு பல்லாண்டு வாழ்க செல்லம் வளமோடு/…

நனிநன்றிகள் பாவை அண்ணா🙏

Nada Mohan
Author: Nada Mohan