அபிராமி கவிதாசன்

05,04.2022
சந்தம் சிந்தும்்வாரம்- 169
தலைப்பு !
“ பட்டினி
பட்டினி பசி பஞ்சம் பரிதவிக்கும் உயிர்தஞ்சம்
தொட்டில் குழந்தையும் தட்டுடன் கையேந்தி /

உழவு தொழிலும் உயிரற்று வாடி
பழமை உறவு பாழ்பட்டு ஓடி /

அன்னிய செலவானி அறுந்து கிடக்க
அன்பின் தமிழுறவை அகற்றிக் நடக்க /

ஏற்றுமதி இறக்குமதி ஏற்றமில்லா செழிப்பு
தோற்றுநிற்கும் ஒற்றுமை தோழமை இழப்பு /

நாட்டை கூறிட்டு நாற்திசையும் விலைபேசி
வேட்டை நாயர்கள் விரைந்து வளைவீச /

பட்டினி கொடியநோய் பாரினை வென்றிடுமா
திட்ட தீர்மானம் தீர்வொன்று தந்திடுமா /

நன்றி பாவை அண்ணா 🙏

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் அன்னை தரணியில் தாய்க்கு நிகர்யாதும் உண்டோ தற்பெருமை இல்லா காத்திட்ட தெய்வம் அழகுபெற்ற வதனம் பழகுவதும் உறவாய் அன்பிலே இருப்பிடம் பண்பிலே மேலானவர் எட்டுமகவுகள்...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் மூத்தோர்... உராய்ந்து உராய்ந்து தேய்ந்திட்ட உளிகள் உருவாக்கிட உழைத்து ஒய்ந்திட்ட உயிர்கள் தளர்ந்தே இன்று தள்ளாடும்...

    Continue reading