மாறியதே வாழ்க்கை

சக்தி சிறினிசங்கர் வாழ்க்கையின் ஓட்டத்தில் வரும் மாற்றங்கள் வாழ்ந்துதான் தீரவேண்டும் என்ற வீணவா நிலத்திலும் புலத்திலும் நிஜ...

Continue reading

மல்லியப்பூ வாசம் எம்மாமனோட நேசம்

சிவரூபன் சர்வேஸ்வரி
மல்லியப்பூ வாசம் எம்மாமனோட நேசம்

பூமழை தூவுதே புகழாரம் வீசுதே
பாமழை காண்கிறேன் பாசமாய் தேடுவேனே
வாமழை நீயும் வசந்தமே துலங்கிடவே
காண்புகழ் ஓங்கிடவே காதலுமே கூடுதே

ஆடிடும் மனசுக்குள் மத்தாப்பு விரியுதே
தேடியே வருவாரு தேவையை உணர்ந்தவரு
மல்லியப்பூ வாசம் என்னாமனோட நேசம்
அல்லல் எனக்கில்லை ஆணழகன் பாருங்கடி

மெல்லெனக் குளிரவும் வைப்பானே என்னையும்
நில்லெனச் சொல்லியே நெகிழும் அகமுமடி
அன்பினால் வளைப்பானே அணைத்துமே நிற்ப்பானே
கட்டிளம் காளையடி களையான சிங்கமடி

விண்மீனாய் ஒளிர்வேனே விரையமும் இல்லாது
ஏங்கும் இதயத்திலே இலட்சியம் தோற்பதில்லை
மூங்கில் காட்டினிலே இசைக்கும் நாதமாக
காத்திருக்கும் நேரமெல்லாம் பூத்திருக்கும் எண்ணமடி

சிவரூபன் சர்வேஸ்வரி