14
May
குமுதினிப் படுகொலை – 90, 41ஆம் ஆண்டு நினைவு
ஜெபா ஸ்ரீதெய்வீகன் - கனடா
15-05-2026
ஆழி சூழ்ந்த நெடுந்தீவு தன்னில்
வாழி எனப் புறப்பட்ட குமுதினி
குருதி...
19 . 05 .26
ஆக்கம் 226
நெஞ்சம் மறக்குமா
கடந்த காலம் நடந்தது
நினைக்கையில் கனத்த
நெஞ்சம் மறக்குமா
தொடர்ந்த கோலம் முடைந்த
அனர்த்தங்களில் சனத்தைத்
தீர்த்த வஞ்சம் மறக்குமா
படர்ந்த இன அழிப்பும்
வான் குண்டு வெடிப்பும்
சிதறிய உடலமும் உதறிய
குருதி உறைந்து அறைந்த
பசுமரத்தாணி அறுக்குமா
கொஞ்சமும் ஈவு இரக்கமின்றி
பஞ்சமா பாதகரின் நரக வாழ்வு
அஞ்சி அஞ்சி வீதியில் விதியோடு
நீதி கேட்டு மதி மயங்கும் சதிகள்
துறக்குமா
Session expired
Please log in again. The login page will open in a new tab. After logging in you can close it and return to this page.