அபிராமி கவிதாசன்.

கவிஇலக்கம்- 170 /
விருப்பு தலைப்பு ! 20.04.2022
“ எதிர்காலம் இருளானதோ “

நான்சென்று வாழ்வேன்
நலமாக என்றேன்
ஏன்விடிய இல்லை எதிர்காலம்
இருளானதோ /

நாளை மலரும் நமது நாடென
வேளையின் வேதனை விடியாது போனதோ /

மாண்ட உயிருக்கு மரியாதை செய்திட
ஆண்ட தமிழனாய் அனுகிட அருகில்லை /

தாய்மண் வாசம் தமிழரின் பாசம்
வாய்மொழி சிந்துதமிழ் வரலாறு பேசும் /

தாய்வீட்டு மகழ்வீந்த தாய்மண்ணே
வணக்கம்
சேய்வந்து வாழ்ந்திட சேர்ந்திடும்
இனக்கம் /

என்ஈழ தேசமோ என்றும்என் நேசமே
அன்றலர் மலராய் அன்னைமடி மலர்வேனோ /

புதிரான சதிகாரர் போராட்ட விதியாலே
எதிர்காலம் இருளாகி ஏற்றத்தை இழந்ததோ /

நன்றி 🙏

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் வாழ்த்துகள் விதம்விதம் ஒவ்வொன்றும் பதந்தரும் அவ்வப்போ அள்ளி வீசும் சொற்களில் அர்த்தங்கள் நேசமுடன் பொங்கிடுமே திருமணம் ,தீபாவளி ,...

    Continue reading

    செல்வி நித்தியானந்தன் வாழ்த்து தமிழரின் பண்பாடு வாழ்த்தாக வந்திடும் தரணியே போற்றியே சிறப்பாக மிளிர்ந்திடும் தைபிறப்பு வாழ்த்தே வந்திடும் ஆரம்பம் வஞ்சித்து...

    Continue reading