பண்படுமோ பண்பாடு ??

ரஜனி அன்ரன் (B.A) பண்படுமோ.....23.04.2026 யாதும்ஊரே யாவரும்கேளீர் என்றனர்அன்று யாதொரு பண்பாடுமின்றி வாழ்கின்றனர்இன்று பேதம்கடந்த நேசமே...

Continue reading

அபிராமி கவிதாசன்.

கவிஇலக்கம்- 170 /
விருப்பு தலைப்பு ! 20.04.2022
“ எதிர்காலம் இருளானதோ “

நான்சென்று வாழ்வேன்
நலமாக என்றேன்
ஏன்விடிய இல்லை எதிர்காலம்
இருளானதோ /

நாளை மலரும் நமது நாடென
வேளையின் வேதனை விடியாது போனதோ /

மாண்ட உயிருக்கு மரியாதை செய்திட
ஆண்ட தமிழனாய் அனுகிட அருகில்லை /

தாய்மண் வாசம் தமிழரின் பாசம்
வாய்மொழி சிந்துதமிழ் வரலாறு பேசும் /

தாய்வீட்டு மகழ்வீந்த தாய்மண்ணே
வணக்கம்
சேய்வந்து வாழ்ந்திட சேர்ந்திடும்
இனக்கம் /

என்ஈழ தேசமோ என்றும்என் நேசமே
அன்றலர் மலராய் அன்னைமடி மலர்வேனோ /

புதிரான சதிகாரர் போராட்ட விதியாலே
எதிர்காலம் இருளாகி ஏற்றத்தை இழந்ததோ /

நன்றி 🙏

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் வாயார வாழ்த்துகிறேன் மூன்று நூறுடன் ஜம்பதின் முகிழ்வு முத்தப்பாய் கிடைத்த அரியதொரு நிகழ்வு சந்தத்துடன் கவியும் சந்தோச...

    Continue reading