“வெற்றி”

“மதிமகன்”
வெற்றி”(359)
எட்டி எட்டிப் பார்க்கும்
எதிரிலும் வந்தும் நிற்கும்
கட்டி அணைக்க போக…
கண்ணாம் பூச்சி காட்டும்!

கிட்டுதென நெருங்கி வரும்
கீச்சுமாச்சு விளை யாடும்
பட்டு தான் என்று காட்டும்
பழையபடி நழுவிப் போகும்!

கட்டம் போட்டுப் பார்ப்பார்
காலம் சிறக்கும் என்பார்
பட்டது துளிர்க்கும் என்பார்
பாவ பூசை போதுமென்பார்!

வீட்டில் பலதும் சொல்வர்
விளையாட்டே தினமும் என்பர்
கூட்டில் உன்னை ஏற்றுவர்
குற்றப் பத்திரிகை தருவர்!

வெற்றி பெறுவது இலகல்ல
விடிய கிடைக்கும் பொருளல்ல
சற்றே பயிற்சியும் முயற்சியும்
சார்ந்தே கிடைப்பது அதுவாகும்!

சிவரூபன் சர்வேஸ்வரி செந்தூரப்பூவே ஃஃஃஃஃஃஃஃஃஃஃ செந்தூரப்பூவே செங்காந்தள் விழியே வருவாயே// மந்தாரம் கொட்டும் மாசில்லாத வீணையிலே// ஒய்யாரமாக ...

Continue reading