தாங்கமுடியவில்லை..!!

தாங்கமுடியவில்லை பத்து நாட்கள் திருவிழா பரவசமாய் முடிவு பெற பக்தியுடன் சனங்களும் புடைசூழ்ந்து நிற்கவே காவடி கற்பூரச்சட்டி அணிவகுத்து செல்ல அம்மன் பவனிவர அரோகரா...

Continue reading

அபிராமி கவிதாசன்

சந்தம் சிந்தும் சந்திப்பு
வாரம்-289,தலைப்பு!

ஈரம்
…………
மகளினை வாழ்த்தும் வீரம்
மனத்தினில் அன்பின் ஈரம்!
பகலினில் ஒளியின் வீச்சாய்
பைந்தமிழ் அறிவின் வீச்சாய்!
முகமதில் விழியின் பார்வை
முத்தமிழ்க் கவிதைக் கோர்வை!
தகவலாய் விளங்கும் தாயே!
தமிழ்மகள் வெல்வாய் நீயே!

தாயகம் மீட்பாய் நீயே
தமிழையே காப்பாய் நீயே!
வாயகம் போற்றப் பாடும்
வையக ஔவை நீயே!
நாயகம் பூத்த தாலே
நற்பயன் வருமா தாயே ?
நேயகம் கொண்ட காதல்
நேர்த்தியின் மகளே வாழி!

அளப்பெரும் பாசம் வைத்தாய்
அகவைநாள் நினைவில் தைய்த்தாய்
களப்பணி புரியும் நீயே
கனவினில் வாழ்த்த வைத்தாய்
உளப்பெரும் தொட்டில் கட்டி
உன்னையே ஆட்டு கின்றேன்!
வளமெலாம் பெற்றே பேரன்
வாழ்வுடன் உயர்வாய் நீயே!

. ஆசிரியை அபிராமி
கவிதாசன்.
10.12.2024

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் இசை இசையோடு எல்லாம் இவ்வுலகுஇணைத்திடும் பசைபோல ஒட்டியே பாரினில் சிறந்திடும் அகிலத்தில் எல்லாமே இசையோடு சேர்ந்திடும் அன்றாட ...

    Continue reading