10
Jul
தாங்கமுடியவில்லை
பத்து நாட்கள் திருவிழா
பரவசமாய் முடிவு பெற
பக்தியுடன் சனங்களும்
புடைசூழ்ந்து நிற்கவே
காவடி கற்பூரச்சட்டி
அணிவகுத்து செல்ல
அம்மன் பவனிவர
அரோகரா...
10
Jul
நாடொப்பன செய்
நாடொப்பன செய்
செய்வன திருந்திடச் செய்யும் போதினிலே
நல்லென நாட்டிற்கு அமைந்த வேளையிலே
சில்லென...
10
Jul
மரணித்தவனே மறுபடி வந்தால்
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
10-07-2025
மரணத்தின் மௌனம் கலைந்து
மீண்டும் உயிர்த்தெழுவாயா?
மண்ணில் இட்ட விதை
மறுபடி...
அப்பா
ஜெபா ஸ்ரீதெய்வீகன்
அனைவருக்கும் வணக்கம்🙏
வியாழன் கவிதை
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
கவி இலக்கம்-28
16-05-2024
அப்பா (6 வது வருடம்)
ஆண்டு ஆறு ஓடி மறைந்தாலும்
நீண்ட ஆறாத் துயரம்
மீண்டு வராதோ உங்கள் பாசம்
வேண்டி ஏங்கி நிற்கின்றோம்.
பாசம் பொழிந்த கைகளும்
நேசம் கொண்ட வார்த்தைகளும்
நெஞ்சம் நிறைந்த நேர்மையும்
வஞ்சமில்லா ஈரநெஞ்சமும்
தருணமறிந்து தர்க்கம் விலக்கி
அருளும் அறிவும் எழுந்த ஆளுமையும் அன்னைக்கு நிகரான அன்பின் பெருமை…! மனதிற்குள் இன்னும் வலிக்குதப்பா.
அத்தனை உறவுகள் அருகிருந்தும்
பித்தன் போல் காலனவன்
காவிச் சென்றது கண்ணுக்குள்
இன்னும் நிற்குதப்பா…..
மீண்டுமொரு பிறப்புண்டேல்
வேண்டும் எம் தந்தையாய்
நாண்டி நிற்கின்றோம்.
ஓம் சாந்தி, ஓம் சாந்தி, ஓம் சாந்தி!
நன்றி வணக்கம்
ஜெபா ஸ்ரீதெய்வீகன்.

Author: Nada Mohan
14
Jul
செல்வி நித்தியானந்தன்
இசை
இசையோடு எல்லாம்
இவ்வுலகுஇணைத்திடும்
பசைபோல ஒட்டியே
பாரினில் சிறந்திடும்
அகிலத்தில் எல்லாமே
இசையோடு சேர்ந்திடும்
அன்றாட ...
13
Jul
சிவாஜினி சிறிதரன் சந்த கவி
இலக்கம் _195
"கோடைகாலம்"
கோடையில் வரும்
வாடைகாற்று வசந்தத்தை வரவேற்கிது
வசலில் நிற்கும் வாழையடி...
10
Jul
ஜெயம்
இசைக்கு மயங்காதோர் இவ்வுலகில் இல்லை
இசையொன்றே தாண்டிவிடும் ஜாதிமத எல்லை
இறைவனுக்கு...