பாசப்பகிர்வினிலே………!!

Shanthini Thuraiyarangan பாசம் வைத்து பயபக்தியாக வளர்த்து பார்போற்றி வாழ தன்வாழ்வை பணயம் வைக்கும் உருவே எம் அன்னை எத்தனை பிள்ளைகளானாலும் அத்தனை...

Continue reading

பாசப்பகிர்விலே!

நகுலா சிவநாதன் பாசப்பகிர்விலே! சித்திரத்தாயே முத்திரிரை பதித்த முழுமதி பத்திரமாற்றுத் தங்கமாய் பழங்கதை பேசுவாய் படர்கின்ற கொடியே பண்பாட்டுப்பெட்டகம்...

Continue reading

அமுதான தமிழ்

ரஜனி அன்ரன்

தமிழ் என்றால் அமுது
தமிழ் என்றால் அழகு
தமிழ் என்றால் இனிமை
அள்ள அள்ளக் குறையாத செழுமை
அள்ளிப் பருகிவிட்டால் இனிமை
எல்லைகள் கொண்ட பெருமை
எல்லையில்லாத் தொன்மை
அத்தனையும் கொண்டதே அமுதத் தமிழ் !

கால வெள்ளத்தில் நீந்தி
கரை புரண்டு ஓடி
வடவேங்கடம் தொட்டு தென்குமரி ஈறாக
கங்கை தொட்டு கடாரம் வரை பாய்ந்து
சிங்களம் தொட்டு புட்பகம் வரை
எல்லை வகுத்தது அமுதத் தமிழே !

முன்பின் என்ற வரலாற்றைத் தாங்கி
அகம் புறமென வாழ்வினைப் பிரித்து
வாழ்விற்கு இலக்கணம் வகுத்து
இலக்கியம் தந்த ஒரே மொழி அமுதத்தமிழ்
மொழிகள் எல்லாம் பிறந்தே சிறக்க
அமுதத்தமிழ் சிறந்தே பிறந்து
அரியணை ஏறியதே !

Nada Mohan
Author: Nada Mohan

    அன்னை செல்வி நித்தியானந்தன் கருவறையில் எமைச்சுமந்து கண்விழித்து உயிர்காத்து கருணையில் தனிச்சிறந்து களிப்பாய் வதனமேத்து உதிரத்தால் உறவுசேர்த்து உயிர்கொடுத்த உத்தமியே உறவுகள் பலஇணைந்து உள்ளூர...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் பசுமை.. புரட்சியின் புதுமை காட்சியில் பசுமை ஆட்சியில் அருமை அகிலத்தின் மெருகை அழகுறு வசமாய் ஆக்கிடும் எழிலாய் நீக்கிடும் வெறுமைக்கு நிகரேது செப்பு! பூக்களும்...

    Continue reading