இறைக்கும் பணத்தால் விழிக்குமா உலகு

இறைக்கும் பணத்தால் விழிக்குமா உலகு ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ இயற்கை தரும் பயனில் எமதுவளம் அயராத கொடைகளை அழிக்கும் மனிதர்கள் மரத்தை...

Continue reading

பாசப்பகிர்வினிலே……58

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
08-05-2025

மனசுக்குள் தேனாய் ஒரு பாசம்
மௌனத்தின் நிழலான நேசம்
மனையாளும் அதிபதியும் தானே
மன்னிக்கும் பெண்ணவளும் நீயே

பொறுமையின் பொக்கிஷமும்
பொல்லாமை நீக்குபவளும்
கண்ணாய்க் காப்பவளும்
காவல் தெய்வமும் தானே

பல பிள்ளை பெற்றாலும்
பாரபட்சம் அன்றி நிலையான
பாசப்பகிர்வினிலே திகைக்க வைத்து
தித்திக்க வைப்பவரே அம்மா….

திகட்டாத அன்போடு
தினந்தோறும் பாசப்பகிர்வினிலே…
சொல்லில் வடிக்க முடிக்கா
சொல் தொடரோடு தலைவணங்கி!

என் அம்மாவோடு, அனைத்துலக
அம்மாக்களுக்கும் மனநிறைந்த
அன்னையர் தின வாழ்த்துகள்
உரித்தாகட்டும்…..

Jeba Sri
Author: Jeba Sri

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-09-2025 வாழ்க்கைப் பயணத்தில் வண்ணமாய் குதூகலம் நொடிப் பொழுதினிலே நெஞ்சினை மகிழ்விக்கும் குயிலின் பாட்டினிலே கடலின்...

Continue reading

செல்வி நித்தியானந்தன் குதூகலம் கோடை வந்தாலே கொண்டாட்டம்வந்திட ஆடையும் மாறியே அழகுடன் சேர்ந்திட ஜாடையாய்பூக்களும் அணியாய் மலர்ந்திட வாடையில்...

Continue reading