” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

பாசப்பகிர்வினிலே……58

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
08-05-2025

மனசுக்குள் தேனாய் ஒரு பாசம்
மௌனத்தின் நிழலான நேசம்
மனையாளும் அதிபதியும் தானே
மன்னிக்கும் பெண்ணவளும் நீயே

பொறுமையின் பொக்கிஷமும்
பொல்லாமை நீக்குபவளும்
கண்ணாய்க் காப்பவளும்
காவல் தெய்வமும் தானே

பல பிள்ளை பெற்றாலும்
பாரபட்சம் அன்றி நிலையான
பாசப்பகிர்வினிலே திகைக்க வைத்து
தித்திக்க வைப்பவரே அம்மா….

திகட்டாத அன்போடு
தினந்தோறும் பாசப்பகிர்வினிலே…
சொல்லில் வடிக்க முடிக்கா
சொல் தொடரோடு தலைவணங்கி!

என் அம்மாவோடு, அனைத்துலக
அம்மாக்களுக்கும் மனநிறைந்த
அன்னையர் தின வாழ்த்துகள்
உரித்தாகட்டும்…..

Jeba Sri
Author: Jeba Sri