பாசப்பகிர்வினிலே……58

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
08-05-2025

மனசுக்குள் தேனாய் ஒரு பாசம்
மௌனத்தின் நிழலான நேசம்
மனையாளும் அதிபதியும் தானே
மன்னிக்கும் பெண்ணவளும் நீயே

பொறுமையின் பொக்கிஷமும்
பொல்லாமை நீக்குபவளும்
கண்ணாய்க் காப்பவளும்
காவல் தெய்வமும் தானே

பல பிள்ளை பெற்றாலும்
பாரபட்சம் அன்றி நிலையான
பாசப்பகிர்வினிலே திகைக்க வைத்து
தித்திக்க வைப்பவரே அம்மா….

திகட்டாத அன்போடு
தினந்தோறும் பாசப்பகிர்வினிலே…
சொல்லில் வடிக்க முடிக்கா
சொல் தொடரோடு தலைவணங்கி!

என் அம்மாவோடு, அனைத்துலக
அம்மாக்களுக்கும் மனநிறைந்த
அன்னையர் தின வாழ்த்துகள்
உரித்தாகட்டும்…..

Jeba Sri
Author: Jeba Sri

செல்வி நித்தியானந்தன் இனிமை தேன் உவமையாய் தேவன் பாடலாய் தேன்மதுர குரலாய் தெய்வீக இராகமாய் சுவையாய் சாதமாய் தித்திப்பு இனிப்பாய் பற்பல...

Continue reading

சிவாஜினி சிறிதரன் கவி இல_238 "கோடை" கோடையில் வரும் வாடை காற்று வரவேற்பு கூறுது! பசுமை பாவடை விரிக்கும் பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்! ரோஜாவை ராஜாவாக வாத்து...

Continue reading