” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

பசுமை -72

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
06-05-2025

பச்சைப் பசேலென போர்த்திய பூமி
பார்க்கும் இடமெங்கும் குளிர்ச்சி
இயற்கை உணவை உண்டு
இலவச காற்றை சுவாசிப்பது நன்று

பசுமை மறந்து வாழ்ந்தவன்
பசிக்கு உணவு மாத்திரை
நிலைமை புரிந்து கொண்டவன்
நித்தம் வளத்தை காக்கிறான்

அழிவை நிறுத்தி நாமெல்லாம்
ஆற்றல் பயின்று பசுமை பற்றி
மரத்தை நாட்டி வளம் காக்க
மனித நேயத்துடன் பாதுகாக்க

சுற்றுச் சூழல் சுகாதாரம் காத்து
சந்ததி வாழ வழி வகுத்து
இயற்கையை நாம் நேசிக்க
எம் வாழ்வும் பசுமையாய் மலரும்!

Jeba Sri
Author: Jeba Sri