06
Jul
வர்ண வர்ணப் பூக்களே
பசுமை நிறைந்தது நம்தேசம் பாரு
பலவர்ணங்கள் கொண்டதே மலர்த்தோட்டம் அழகு
கனியும் மனதில்...
03
Jul
வர்ண வர்ணப் பூக்கள் 65
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
03-07-2025
வர்ண வர்ணப் பூக்கள்
வாசம் மிகுந்த பூக்கள்
கண்ணில் காண குளிர்ச்சி...
03
Jul
வர்ண வர்ண பூக்களே!
நகுலா சிவநாதன்
வர்ண வர்ண பூக்களே!
புதுமை படைக்கும் நற்பூக்கள்
புனிதம் நிறைக்கும் நன்மலர்கள்!
அழகு வண்ண நிறமுடனே!
அழகாய்...
இதெல்லாம் இப்ப எங்கே..
சிவதர்சனி இராகவன்
வியாழன் கவிதை நேரத்துக்காக…
இதெல்லாம் இப்ப எங்கை..!!
மனிதர் என்ற போர்வையில்
மனதை முடக்கிய ஆசையில்
அலையும் ஜீவ இராசிகளே
கேளும் எங்கு மனித உரிமை..?
இனம் என்று அடக்கியே
இற்றை வரை ஓயாத போராகி
இழந்த உயிர்கள் எத்தனை
இதை மீட்டுத் தருவார் யாரையா..?
நாட்டுக்கு நாடு போராட்டம்
நாசமாகுது இயற்கை நீரோட்டம்
ஆயுத முனையில் அகங்காரம்
ஆட்டிப் படைக்குதே பணபலம்..!!
மனிதரை மனிதர் வீழ்த்திவிட
மண்ணில் எத்தனை சூதாட்டம்
நரம்பிலா நாக்கின் ஆர்ப்பாட்டம்
நரபலி கேட்குதே கலி காலம்..
பெண்ணின் வாயைப் பூட்டியே
வாழ்ந்த காலம் மலையேற்றம்
ஆயினும் திருமண வாழ்வியலும்
இரண்டாகும் பாதகம் குத்தாட்டம்..
உயர்வாய் ஆக்கிய ஒழுக்கங்கள்
உதாசீனம் ஆகுதே காலமாற்றம்
உரிமைகள் இழந்த பிறப்பாகி
உணர்வுகள் கசிவதே முடிவாமோ..
சிவதர்சனி இராகவன்
12/12/2024

Author: Nada Mohan
01
Jul
வணக்கம்
போர்க்கோலம் ...
கண்டங்கள் எங்கும் கதிகலங்கிட
துண்டங்களாகி உடலங்கள் வீழ்ந்திட
எங்குமே போர்க்கோலம் பூணுது ...
01
Jul
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
01-07-2025
இயற்கை அழிவு ஒருபக்கம்
இனக்கலவரம் மறுபக்கம்
தியாகத்தின் விதை சரித்திரமாகி
தாயகக்கனவு கலைந்த கதையிது…
சேவல்...
29
Jun
ராணி சம்பந்தர்
காலஞ் செய்யும் கோலம்
வால் கொய்யும் வல்லரசின்
நாசகார வேலையில் சிக்கி
முக்கித் தவிக்கும் அப்பாவிகள்
மெல்ல...