21
May
21
May
முயற்சியே பலம் முனைப்பே திடம்
ஜெயம் கவிதை 801
முடியாது என எண்ணினால் முயற்சியின் கதவுகள் அத்தனையும் மூடிவிடும்
நதியென...
21
May
முயற்சியே பலம் முனைப்பே திடம்
ஜெயம்
முனைப்புடன் கால்களை நகர்த்திடின் அவை தடைகளை தாண்டும்
தளராத மனத்துடன் தொடர்ந்தால்தான்...
இதெல்லாம் இப்ப எங்கே..
சிவதர்சனி இராகவன்
வியாழன் கவிதை நேரத்துக்காக…
இதெல்லாம் இப்ப எங்கை..!!
மனிதர் என்ற போர்வையில்
மனதை முடக்கிய ஆசையில்
அலையும் ஜீவ இராசிகளே
கேளும் எங்கு மனித உரிமை..?
இனம் என்று அடக்கியே
இற்றை வரை ஓயாத போராகி
இழந்த உயிர்கள் எத்தனை
இதை மீட்டுத் தருவார் யாரையா..?
நாட்டுக்கு நாடு போராட்டம்
நாசமாகுது இயற்கை நீரோட்டம்
ஆயுத முனையில் அகங்காரம்
ஆட்டிப் படைக்குதே பணபலம்..!!
மனிதரை மனிதர் வீழ்த்திவிட
மண்ணில் எத்தனை சூதாட்டம்
நரம்பிலா நாக்கின் ஆர்ப்பாட்டம்
நரபலி கேட்குதே கலி காலம்..
பெண்ணின் வாயைப் பூட்டியே
வாழ்ந்த காலம் மலையேற்றம்
ஆயினும் திருமண வாழ்வியலும்
இரண்டாகும் பாதகம் குத்தாட்டம்..
உயர்வாய் ஆக்கிய ஒழுக்கங்கள்
உதாசீனம் ஆகுதே காலமாற்றம்
உரிமைகள் இழந்த பிறப்பாகி
உணர்வுகள் கசிவதே முடிவாமோ..
சிவதர்சனி இராகவன்
12/12/2024
Author: Nada Mohan
18
May
சிவரூபன் சர்வேஸ்வரி
மல்லியப்பூ வாசம் எம்மாமனோட நேசம்
பூமழை தூவுதே புகழாரம் வீசுதே
பாமழை காண்கிறேன்...
18
May
குமரன்
இழப்புக்கள்
வாரம் 355
...
18
May
19 . 05 .26
ஆக்கம் 226
நெஞ்சம் மறக்குமா
கடந்த காலம் நடந்தது...