19
Mar
19
Mar
கவிதை என்றாலே….:
ரஜனி அன்ரன் ( B.A)....கவிதை என்றாலே.... 19.03.2026
அழகியலின் அற்புதக்கூடம்
ஆழ்மனதின் ஆத்மார்த்த உணர்வோட்டம்
ஆன்மாவின் ஆத்மீகராகம்...
19
Mar
“முதுமை போற்றி போற்றி”
-
By
- 0 comments
நேவிஸ்பிலிப் கவி இல(579)
பண்பட்ட நிலமாய் பலன் தந்து
பல்லாண்டு வாழ்வில் நிழல் தந்து
நரை என்னும்...
இராசையா களரிபாலா
தேடல்
———-
அறிவுப் பசிக்காய் ஆற்றலுடன் தேடல்
வறியவன் வாழ்வில் வளம்பெறத் தேடல்
புரியாத அனைத்துக்கும் பதில்தரும் தேடல்
சரியா தவாறா சரிப்படுத்தும் தேடல்
இயற்கையின் எல்லையை அறிந்திடத் தேடல்
செயற்கையை உருவகிக்க செயல்வீரன் தேடல்
காதலன் காதலியை காலத்தில் தேடல்
ஆதலினால் காதலியும் ஆடவனைத் தேடல்
பணத்திற்காய் பரதேசம் போயும் தேடல்
கணத்தில் பந்தமின்றிக் கனவினில் தேடல்
இனமெலாம் ஒன்றாக இணைந்திடத் தேடல்
மனமே உறுதிகொள மறுவாழ்வு தேடல்
பெற்றோர் உழைப்பில் பிள்ளைகள் தேடல்
கற்றவராய் ஆகவே கடிந்தும் தேடல்
பற்றுடன் பிள்ளைகள் பரவசத்தின் தேடல்
நற்றவை யாவும் நானிலத்தில் தேடல்
இல்லை என்றதும் இறைவனைத் தேடல்
கல்லும் இரங்கிடும் கரணத்தில் தேடல்
புல்லுக்கு மழைநீர் புவியின் தேடல்
அல்லும் பகலும் அகன்றதே தேடல்.
இலண்டனிலுந்து
இராசையா கௌரிபாலா
Author: Nada Mohan
24
Mar
ஜெபா ஸ்ரீதெய்வீகன்
25-03-2026
அன்னைக்கு நிகர் அவனியில் ஏது
தன்னை உருக்கி தரமாக வளர்த்து
நீதிக் கதைகளை நீளமாய்ச்...
23
Mar
-
By
- 0 comments
ராணி சம்பந்தர்
அன்பில் உயர்ந்த பிறப்பிடம்
ஆதரவில் பதிந்த சிறப்பிடம்
இனிமை உதித்த தரிப்பிடம்
ஈரேழு ஜென்மும் போற்றும்
உலகத்தோரின்...
18
Mar
-
By
- 0 comments
செல்வி நித்தியானந்தன்
அன்னை
தரணியில் தாய்க்கு
நிகர்யாதும் உண்டோ
தற்பெருமை இல்லா
காத்திட்ட தெய்வம்
அழகுபெற்ற வதனம்
பழகுவதும் உறவாய்
அன்பிலே இருப்பிடம்
பண்பிலே மேலானவர்
எட்டுமகவுகள்...