இராசையா களரிபாலா

தேடல்
———-
அறிவுப் பசிக்காய் ஆற்றலுடன் தேடல்
வறியவன் வாழ்வில் வளம்பெறத் தேடல்
புரியாத அனைத்துக்கும் பதில்தரும் தேடல்
சரியா தவாறா சரிப்படுத்தும் தேடல்

இயற்கையின் எல்லையை அறிந்திடத் தேடல்
செயற்கையை உருவகிக்க செயல்வீரன் தேடல்
காதலன் காதலியை காலத்தில் தேடல்
ஆதலினால் காதலியும் ஆடவனைத் தேடல்

பணத்திற்காய் பரதேசம் போயும் தேடல்
கணத்தில் பந்தமின்றிக் கனவினில் தேடல்
இனமெலாம் ஒன்றாக இணைந்திடத் தேடல்
மனமே உறுதிகொள மறுவாழ்வு தேடல்

பெற்றோர் உழைப்பில் பிள்ளைகள் தேடல்
கற்றவராய் ஆகவே கடிந்தும் தேடல்
பற்றுடன் பிள்ளைகள் பரவசத்தின் தேடல்
நற்றவை யாவும் நானிலத்தில் தேடல்

இல்லை என்றதும் இறைவனைத் தேடல்
கல்லும் இரங்கிடும் கரணத்தில் தேடல்
புல்லுக்கு மழைநீர் புவியின் தேடல்
அல்லும் பகலும் அகன்றதே தேடல்.

இலண்டனிலுந்து
இராசையா கௌரிபாலா

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் அன்பில் உயர்ந்த பிறப்பிடம் ஆதரவில் பதிந்த சிறப்பிடம் இனிமை உதித்த தரிப்பிடம் ஈரேழு ஜென்மும் போற்றும் உலகத்தோரின்...

    Continue reading

    செல்வி நித்தியானந்தன் அன்னை தரணியில் தாய்க்கு நிகர்யாதும் உண்டோ தற்பெருமை இல்லா காத்திட்ட தெய்வம் அழகுபெற்ற வதனம் பழகுவதும் உறவாய் அன்பிலே இருப்பிடம் பண்பிலே மேலானவர் எட்டுமகவுகள்...

    Continue reading