இராசையா கௌரிபாலா

ஒற்றுமை

ஒற்றைக் காகிதத்தின் ஒற்றை வரியில்
பெற்றுவிட முடியுமா பொறுமையின் உருவமே
விற்பனைப் பொருளல்ல வேண்டுமென நினைக்க
தற்பெருமை அழித்திட
ஒற்றுமை கூடுமே

கற்பனையில் மிதக்கும் கலகத்தை விலக்கி
சிற்பமாய் வடிவமைக்க
சிந்தையின் உதயமே
அற்பன் பவிசில் ஆர்ப்பரிக்கும்
கடலே
நற்பலன்பல கிடைக்கும்
நானிலத்தின் ஒற்றுமையே

சுற்றம் தேவை சுவையும் அதுவே
கற்றவர் கைபிடித்து கல்லாமை நீக்கிட
மற்றவரும் நல்வளம்பெற மானுடம் போற்றுமே
குற்றம்காணாக் குவலயம்
கேட்போம் ஒற்றுமையாய்.

இராசையா கௌரிபாலா

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் மாற்றம் மாற்றம் கண்டிட பலரது இணைப்பு மாறுமோ வேண்டிட சிலரது பிணைப்பு காட்டிடும் ஆர்வமும் கவிதையின் முனைப்பு கண்ணியம் காட்டியே காவிடும்...

    Continue reading