பாசத்தின் பகிர்வினிலே

பாசத்தின் பகிர்வினிலே பாசத்தின் பரிவினிலே பனியாய் உறைந்தேன நேசத்தின் ஊற்றினிலே நெகிழ்ந்து நின்றேனே வாசமுல்லை விரிந்தது...

Continue reading

பாசப்பகிர்வினிலே………!!

Shanthini Thuraiyarangan பாசம் வைத்து பயபக்தியாக வளர்த்து பார்போற்றி வாழ தன்வாழ்வை பணயம் வைக்கும் உருவே எம் அன்னை எத்தனை பிள்ளைகளானாலும் அத்தனை...

Continue reading

இராசையா கௌரிபாலா

ஒற்றுமை

ஒற்றைக் காகிதத்தின் ஒற்றை வரியில்
பெற்றுவிட முடியுமா பொறுமையின் உருவமே
விற்பனைப் பொருளல்ல வேண்டுமென நினைக்க
தற்பெருமை அழித்திட
ஒற்றுமை கூடுமே

கற்பனையில் மிதக்கும் கலகத்தை விலக்கி
சிற்பமாய் வடிவமைக்க
சிந்தையின் உதயமே
அற்பன் பவிசில் ஆர்ப்பரிக்கும்
கடலே
நற்பலன்பல கிடைக்கும்
நானிலத்தின் ஒற்றுமையே

சுற்றம் தேவை சுவையும் அதுவே
கற்றவர் கைபிடித்து கல்லாமை நீக்கிட
மற்றவரும் நல்வளம்பெற மானுடம் போற்றுமே
குற்றம்காணாக் குவலயம்
கேட்போம் ஒற்றுமையாய்.

இராசையா கௌரிபாலா

Nada Mohan
Author: Nada Mohan