கனவுப் பயணம்

சக்தி சிறினிசங்கர் விழி மூடித் தூங்குகையில்பயணிக்கின்றேன் தொலைதூரம் வழிநெடுக வயல்வெளிகள் வயல்வெளி யாவும் பச்சைப் பசேலென விரிந்து கண்களைக்...

Continue reading

கனவுப்பயணம்……

ரஜனி அன்ரன் (B.A) ....கனவுப்பயணம்..... 07.05.2026 கற்பனைச் சிறகைவிரித்து கனவுகளில் மிதந்து எழுத்துக்களின் தோப்பில் தொலைந்து எண்ணங்களின்...

Continue reading

இரா.விஜயகௌரி

நிலையற்ற யாக்கை…….

பூமிப்பந்தொரு. வாழ்க்கை
புதிதென தினமும் மாற்றம்
அறியாப். பெருந்நொடி
தெரியா முகங்களாய். திருப்பம்

புரியா மனிதர்களாய் நாம்
நிலையென. எண்ணி நிதம்
நிலையா உலகினில். ஓட்டம்
கலையும். கனவாய். தொடரிது

சேர்த்துச் சேர்த்து சேமிப்பில் இட்டு
உண்பதும் இன்றி உடுப்பதும் இன்றி
நாளைப்பொழுதினைக் கணக்கினிலிட்டு
மூட்டை கட்டிடும் முட்டாள்கள் நாம்

மூச்சை இழுக்க முனைய மறுத்தால்
இதயக்கதவு இயல்பினை மறக்கும்
காற்றின் பெருநொடி. கலங்கி நின்றிடின்
கனக்கும் பெருவெளி நிலையை இழக்கும்

அட்டா வாழ்வு இதுவென உணரின்
எதற்கென ஓட்டம் இயல்பை மறந்து
பொருள்பட எழுதி புரிந்து வாழ்ந்து
நொடிகளை எல்லாம் வாழ்வாய்ச் சமைப்போம்

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் வாயார வாழ்த்துகிறேன் மூன்று நூறுடன் ஜம்பதின் முகிழ்வு முத்தப்பாய் கிடைத்த அரியதொரு நிகழ்வு சந்தத்துடன் கவியும் சந்தோச...

    Continue reading