புத்தாண்டே வா -56

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 10-04-2025 புத்தாண்டே வா புதுமை பொலிவுடனே புலத்தில் நிம்மதியும் பூகோளத்தில் அமைதியும் சோகங்கள் விட்டு சொந்தங்கள் சேர்ந்து சொல்பேச்சு கேட்டு சொர்க்க...

Continue reading

இன்னமும் மாறவில்லை

நகுலா சிவநாதன் இன்னமும் மாறவில்லை காலநிலை இன்னமும் மாறவில்லை கடும் குளிரும் குறையவில்லை பாட்டு வெயிலும் பகலவன் ஒளியும் கூட்டுது...

Continue reading

இரா.விஜயகௌரி

நிலையற்ற யாக்கை…….

பூமிப்பந்தொரு. வாழ்க்கை
புதிதென தினமும் மாற்றம்
அறியாப். பெருந்நொடி
தெரியா முகங்களாய். திருப்பம்

புரியா மனிதர்களாய் நாம்
நிலையென. எண்ணி நிதம்
நிலையா உலகினில். ஓட்டம்
கலையும். கனவாய். தொடரிது

சேர்த்துச் சேர்த்து சேமிப்பில் இட்டு
உண்பதும் இன்றி உடுப்பதும் இன்றி
நாளைப்பொழுதினைக் கணக்கினிலிட்டு
மூட்டை கட்டிடும் முட்டாள்கள் நாம்

மூச்சை இழுக்க முனைய மறுத்தால்
இதயக்கதவு இயல்பினை மறக்கும்
காற்றின் பெருநொடி. கலங்கி நின்றிடின்
கனக்கும் பெருவெளி நிலையை இழக்கும்

அட்டா வாழ்வு இதுவென உணரின்
எதற்கென ஓட்டம் இயல்பை மறந்து
பொருள்பட எழுதி புரிந்து வாழ்ந்து
நொடிகளை எல்லாம் வாழ்வாய்ச் சமைப்போம்

Nada Mohan
Author: Nada Mohan

    வஜிதா முஹம்மட் சந்திர நாட்காட்டி சரித்திர வழிகாட்டி புனிதப்பட்ட மாதம் புரையோடிய பாவத்தின் மன்னிப்பு நோன்பின்நேரம் இறைகட்டளையை நினைவூட்டி மனித...

    Continue reading