தாங்கமுடியவில்லை..!!

தாங்கமுடியவில்லை பத்து நாட்கள் திருவிழா பரவசமாய் முடிவு பெற பக்தியுடன் சனங்களும் புடைசூழ்ந்து நிற்கவே காவடி கற்பூரச்சட்டி அணிவகுத்து செல்ல அம்மன் பவனிவர அரோகரா...

Continue reading

இ. உருத்திரேஸ்வரன்

கவிதை 172
வேண்டும் வலிமை
வாழ்வில் வேண்டும் வலிமை
வஞ்சனை நிறைந்த உலகம்
நெஞ்சில் வேண்டும் வலிமை
வருங்காலம் உந்தன் கையில்

உடல் வலிமை குறைந்தாலும்
உள்ளத்தில் வலிமையிருந்தால்
தடையை தாண்டி வீறு நடை போட
தரணியும் உனது கையில்

தன்னை விட மற்றவரை
வலிமையாக்குவது உன் வலிமை
வலிகள் தாங்கும் வலிமையிருந்தால்
வசந்தமாகும் உந்தன் வாழ்க்கை
நன்றி
வணக்கம்

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் இசை இசையோடு எல்லாம் இவ்வுலகுஇணைத்திடும் பசைபோல ஒட்டியே பாரினில் சிறந்திடும் அகிலத்தில் எல்லாமே இசையோடு சேர்ந்திடும் அன்றாட ...

    Continue reading