ஆளுகின்றான் அடிபணிகின்றோம்..!!

வியாழன்கவி 2300!! ஆளுகின்றான் அடிபணிகிறோம்!! வாழுகின்ற வாழ்க்கையிலே வழி நெடுக பயணிப்பான் ஆளுகின்ற அழுத்தக்காரன் வீழ்ந்திடுவான் உழைப்பாலே சோம்பலென்று கிடந்தாலோ தூரம்...

Continue reading

வரமாகும் வாய்ப்புக்களே

இரா.விஜயகௌரி வரமாகும் வாய்ப்புக்கள் அவை தடமாகும் செயல் தழுவின் உரமாய் நாம் பயன்கொள்ளின் உரைத்தெழுதும் நம் தடங்கள் வாய்த்ததெல்லாம்...

Continue reading

எல்லாளன்

சந்தம் சிந்தும் சந்திப்பு 252 “காதலர்”. நினைக்க ஊறும் பரவசம்
நெஞ்சில் ஓடும் ஒயில் முகம்
கனக்கும் இதயம் கண்டதும்
காந்தக் கண்கள் ஒன்றிடும்.

நித்திரை மறந்து இரவுகள்
நினைப்பில் புரளும் கனவுகள்
பத்தியம் ஆகும் உணவுகள்
பசியே தோன்றா பொழுதுகள்

எங்கே தோன்றும் முகமென
ஏங்கும் தேடும் உள்மனம்
வந்தால் நேரே வார்தைகள்
வாயுள் நாவை பிழற்றிடும்.

கருமையும் தெரியும் அழகாக
காதலில் பேதங்கள் குருடாக
உருவிலும் ஊனம் பெரிதாக
உளத்தில் தெரியா குறையா.

உயிர்கள் உருவே காமத்தில்
உலகே சந்ததி தாகத்தில்
இனும் ஏன் தாமதம் காதலே
இணைக!பிணைக வாழியவே
-எல்லாளன்-

Nada Mohan
Author: Nada Mohan