எல்லாளன்

சந்தம் சிந்தும் சந்திப்பு “இதயம்”. எனக்கென்றோர் இதயம்
இனிய அன்பு பதியம்
தனக்கு வரும் நலதை
தரும் எனக்கு நிதமும்.

இணையான அவட்கு
இதமான அணைப்பு
மண நாளின் முதலாய்
மனம் தருமே தொடராய்.

மனையிலுள்ள பணிகள்
மலர முகம் புரிவாள்
நினைவில் தன் கனவில்
நிறுத்தி மகன் மகளை

குடும்பம் தன் உயிராய்
குறி வாழ்வில் நெறியாய்
உருகும் அவள் இதயம்
உள்ளங்களை கவரும்.

இந்த அவள் இயல்பே
எனை கவர்ந்த நிலையே
வந்தமர்ந்த காதல்
வளர்ந்து மனை அறமாய்.

என் இதய கமலம்
இருப்பே என் பலமும்
இல்லாத பொழுதில்
இல்லமே இருளும்.
-எல்லாளன்-

Nada Mohan
Author: Nada Mohan

    வசந்தா ஜெகதீசன் அறிவாலயம் அனலானதே .... காலத்தின் பெட்டகமே காவியத்தின் பொக்கிசமே கடைக்கழக நூல்களின் தேட்டத்து நூலகமே எண்ணற்ற பதிவுகளால் பூத்திருந்த பூஞ்சோலை காடையரின்...

    Continue reading