கனவுப் பயணம்

சக்தி சிறினிசங்கர் விழி மூடித் தூங்குகையில்பயணிக்கின்றேன் தொலைதூரம் வழிநெடுக வயல்வெளிகள் வயல்வெளி யாவும் பச்சைப் பசேலென விரிந்து கண்களைக்...

Continue reading

கனவுப்பயணம்……

ரஜனி அன்ரன் (B.A) ....கனவுப்பயணம்..... 07.05.2026 கற்பனைச் சிறகைவிரித்து கனவுகளில் மிதந்து எழுத்துக்களின் தோப்பில் தொலைந்து எண்ணங்களின்...

Continue reading

ஒளவை

பரவசம்
=======
மயங்கும் மாலை மனதை வருட
பயங்கள் மறந்த பதமான பொழுது
இயற்கை அழகில் இதயம் மிதக்க
சயனம் தாலாட்ட சந்தோச பரவசம்

முழுநிலா வானில் மெய்மறந்த வேளை
பழுதில்லா நிலவைப் பார்த்து இரசிக்கையில்
தொழுகின்ற கடவுளாய்த் தோன்றும் உருவுடன்
அழுவதும் சிரிப்பதும் ஆனந்த பரவசம்

தென்றல் காற்று தேகம் தீண்ட
இன்ப ஊற்று இதமாய்த் தூண்ட
அன்பு உள்ளம் அருகில் இருக்க
தன்னை மறந்து தங்கும் பரவசம்

அலைகள் கரையை அடித்துச் செல்ல
நிலைத்த கால்கள் நீரினில் புதைய
கனத்த சுமைகள் கரைந்து போக
மனது மகிழ்ந்து மிதக்கும் பரவசம்

அருவியின் ஓசையும் அழகிய வீழ்ச்சியும்
குருவிகள் இன்பமாய்க் குலவிடும் காட்சியும்
உருகிய உள்ளத்தில் உறைகின்ற வேளையில்
தருகின்ற பரவசம் தன்னிலை மறக்குமே.

ஒளவை.

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் வாயார வாழ்த்துகிறேன் மூன்று நூறுடன் ஜம்பதின் முகிழ்வு முத்தப்பாய் கிடைத்த அரியதொரு நிகழ்வு சந்தத்துடன் கவியும் சந்தோச...

    Continue reading