தாங்கமுடியவில்லை..!!

தாங்கமுடியவில்லை பத்து நாட்கள் திருவிழா பரவசமாய் முடிவு பெற பக்தியுடன் சனங்களும் புடைசூழ்ந்து நிற்கவே காவடி கற்பூரச்சட்டி அணிவகுத்து செல்ல அம்மன் பவனிவர அரோகரா...

Continue reading

ஒளவை

வராமல் வந்த நாயகன்
≠====≠=====≠====≠====≠
மாலை நேரம்
மங்கும் ஒளியில்
சாலை ஓரம்
சாடை பேசிட
வேளை மறந்து
வெட்கம் இன்றிக்
காளை உன்னைக்
காணத் துடிப்பேன்

முரட்டுப் பார்வை
மனதைத் தைக்க
மிரட்டிப் போவாய்
மீண்டும் மீண்டும்
வரட்டுக் கெளரவம்
விட்டுத் தள்ளி
விரட்டி விரட்டி
வருவேன் பின்னால்

நாளும் பொழுதும்
நாயாய் உன்னை
நீளும் கனவுடன்
நித்தமும் தொடர்ந்து
ஏழு சென்மமும்
என்னவன் என்று
வாழும் வாழ்வை
வரமாய்க் கண்டேன்

மனதில் உன்னை
முழுதாய் நிறைக்கச்
சினந்து ஒதுக்கிச்
சீற்றம் கொள்வாய்
கனவில் மட்டும்
கைக்குள் வந்து
தினமும் உருகிக்
காதல் செய்வாய்.

ஒளவை.

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் இசை இசையோடு எல்லாம் இவ்வுலகுஇணைத்திடும் பசைபோல ஒட்டியே பாரினில் சிறந்திடும் அகிலத்தில் எல்லாமே இசையோடு சேர்ந்திடும் அன்றாட ...

    Continue reading