தண்ணீருக்காய் திரளும் போர் மேகங்கள்

வியாழன் கவிதை நேரம்!! கவிதை-2311 தண்ணீருக்காய்த் திரளும் போர் மேகங்கள்..!! ஆழக்கடலைக் கடக்கின்ற அத்தனை கப்பல்களும் அள்ளிக் கொணரும் நமக்காய் அத்தியாவசியப் பொருட்களை.. அந்தோ...

Continue reading

தண்ணீரிற்காய் திரளும் போர் மேகங்கள்

ராணி சம்பந்தர் மண்ணிற்கும் விண்ணுக்குமே மழை நீரில் ஏணிகட்டி குதூகல கொண்டாடத் தண்ணீரிற்காய் திரளும் போர் மேகங்கள் தாகம் சுழலும்...

Continue reading

தண்ணீருக்காய் திரளும் போர்மேகங்கள்..

வசந்தா ஜெகதீசன் தண்ணீருக்காய் திரளும் போர்மேகங்கள்... வரட்சி நிலைபோக்கிடுமே வளமது திரண்டிடுமே கார்மேகக் கறுக்கலிலே கனமழை பெய்திடுமே காரியத்தின் சித்திகளும் கைகூடும்...

Continue reading

ஒளவை

வழிகாட்டு இறைவா…..
======================
ஆதி முதல்வனே
அண்டம் ஆள்பவனே
சோதி வடிவனே
சொர்க்கம் உன்பதமே
நீதி வழுவுதே
நித்தமும் பூமியில்
சேதிகள் மூலம்
சொல்வது என்னவோ

வாதிட ஏதுளது
வந்தபயன் கொண்டோமே
தீதினில் உழல்கின்றோம்
திண்டாடி மாழ்கின்றோம்
நாதியற்ற உயிர்களோ
நானிலத்தில் பலகோடி
பாதிப்பைக் குறைக்கும்
பரிகாரம் காட்டிவிடு

கங்கையைத் தாங்கிக்
கனத்தினைக் குறைத்தாய்
திங்களைக் காத்து
சடையிலே வைத்தாய்
மங்கிடும் பூமியின்
மானத்தைக் காக்கத்
தங்கிடு இங்கே
தாங்கவில்லைத் துன்பம்

பொங்கிடும் தீமையின்
போக்குகள் நீளுதே
எங்கிலும் உந்தன்
எண்ணமும் மறையுதே
பங்கங்கள் சூழ்ந்து
பாரெங்கும் துன்பமே
எங்களை மீட்க
ஏதொரு வழிகாட்டு.

ஒளவை.

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் அன்பில் உயர்ந்த பிறப்பிடம் ஆதரவில் பதிந்த சிறப்பிடம் இனிமை உதித்த தரிப்பிடம் ஈரேழு ஜென்மும் போற்றும் உலகத்தோரின்...

    Continue reading