இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே

இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே உள்ளமும் மகிழ்வாக ஊஞ்சலாடும் எண்ணமும் விரிந்தாட /_ கள்ளமில்லை கபடமில்லை...

Continue reading

ஒளியிலே தெரிவது

ஜெயம் தங்கராஜா

கவி 749

ஒளியிலே தெரிவது

ஒளியிலே தெரிவது இருளகன்ற பாதை
அந்த பாதையின் மேலே சுறுசுறுப்பாக மனிதர்கள்
ஞாலத்தின் மேலே வெளிச்சத்தின் சாலம்
சூரிய விளக்காலெங்கும் ஒளிமயமான கோலம்

ஒளியில் தெரிவது இயற்கையின் அழகு
எழிலுடன் திகழும் மாட்சிமை உலகு
பயத்தை விட்டகற்றி உற்சாகமடையும் உயிரினம்
பசியை ஆற்ற விளைந்துவிடும் பயிரினம்

ஒளியில் தெரிவது நன்மைகளின் வரவு
ஒளித்துநின்று எட்டிப்பார்க்கும் ஓடிப்போன இரவு
அருளையே அள்ளித்தரும் இறைவனின் தோற்றம்
பெருமைப்படுத்தும் ஒளியாலே பூலோகமே கொண்டாட்டம்

ஜெயம்
14-11-2024

Nada Mohan
Author: Nada Mohan

வசந்தா ஜெகதீசன் தமிழே... உயிர்ப்பின் உயிரே உறவின் இணைப்பே ! அழகு தமிழே ஆணி வேரே! மூத்த மொழியே முத்தமிழ் நயமே! குமரியில் பூத்தாய் குவலயம்...

Continue reading