தவிக்கும் நிலை மாறிடுமோ ,ராணி சம்பந்தர்

புத்தம் புதுப் பொலிவோடு நித்தம் நாடும் சோலியோடு பிறந்த ஆங்கிலப்புத்தாண்டே நீ வருக நல்லொளி தருகவே குறுகிய பாதையில்...

Continue reading

ஒளியிலே தெரிவது

ஜெயம் தங்கராஜா

கவி 749

ஒளியிலே தெரிவது

ஒளியிலே தெரிவது இருளகன்ற பாதை
அந்த பாதையின் மேலே சுறுசுறுப்பாக மனிதர்கள்
ஞாலத்தின் மேலே வெளிச்சத்தின் சாலம்
சூரிய விளக்காலெங்கும் ஒளிமயமான கோலம்

ஒளியில் தெரிவது இயற்கையின் அழகு
எழிலுடன் திகழும் மாட்சிமை உலகு
பயத்தை விட்டகற்றி உற்சாகமடையும் உயிரினம்
பசியை ஆற்ற விளைந்துவிடும் பயிரினம்

ஒளியில் தெரிவது நன்மைகளின் வரவு
ஒளித்துநின்று எட்டிப்பார்க்கும் ஓடிப்போன இரவு
அருளையே அள்ளித்தரும் இறைவனின் தோற்றம்
பெருமைப்படுத்தும் ஒளியாலே பூலோகமே கொண்டாட்டம்

ஜெயம்
14-11-2024

Nada Mohan
Author: Nada Mohan

சக்தி சிறினிசங்கர் சிறுமைகளை அகற்றிடவே பொங்கு சினத்தினையே களைந்திடவே பொங்கு கறுத்தஉள்ளம் கண்டாலே பொங்கு காசுக்காய் அநீதிசெய்வோர் கண்டால் உறுத்துமட்டும்...

Continue reading

வசந்தா ஜெகதீசன் பொங்குவாய்... நிறைமதியாண்டாய் நித்தம் மகிழ்வாய் வரவுகள் சீராய் வளர்மதி வையமாய் வற்றாத கல்வியாய் உலகியல் ஐக்கியம் உயர்வின் பதிவாய் பொங்குவாய் புத்தாண்டே புலத்திலும்...

Continue reading