கஞ்சா

Selvi Nithianandan கஞ்சா( 672)

வீட்டிலே அஞ்சாத புள்ள
வெளியே போகுது மடிய
விரும்பி விரும்பி தின்ன
வீணாய் பணமும் முடிய

இளவல் தொடங்கி பெரிசும்
இன்பம் மூட்டும் கஞ்சா
இல்லை இன்று என்றால்
இயங்க மறுக்கும் கெஞ்ச

பெற்றோர் புள்ளை பாசம்
பெத்ததால் உடையுது வேசம்
படிப்பு அஞ்சா நடிப்பு
முடிவு தெரியும் கஞ்சா

தடைக்கு அஞ்சா பாம்பு
தர்கம் பண்ணும் வீம்பு
நடைக்கு ஆடும் தெம்பு
நன்றி சொல்லும் கஞ்சா

Nada Mohan
Author: Nada Mohan

சிவாஜினி சிறிதரன் சந்த கவி இலக்கம் _ 217 "உறைபனி" பூம்பனி பூத்திருக்கு பாத்திருக்க மலருது பார்வைக்கு அழகு பாலரின் மனதுக்கு மகிழ்வு! காடுகள்...

Continue reading