புத்தாண்டே வா -56

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 10-04-2025 புத்தாண்டே வா புதுமை பொலிவுடனே புலத்தில் நிம்மதியும் பூகோளத்தில் அமைதியும் சோகங்கள் விட்டு சொந்தங்கள் சேர்ந்து சொல்பேச்சு கேட்டு சொர்க்க...

Continue reading

இன்னமும் மாறவில்லை

நகுலா சிவநாதன் இன்னமும் மாறவில்லை காலநிலை இன்னமும் மாறவில்லை கடும் குளிரும் குறையவில்லை பாட்டு வெயிலும் பகலவன் ஒளியும் கூட்டுது...

Continue reading

கமலா ஜெயபாலன்

பெற்றோரே

தன்னலமற்ற அன்பைத் தந்தாய் தாயே
தன்னை உருக்கி தாங்கினார் தந்தையும்
என்னை மண்ணிற்கு ஈன்றனர் இருவரும்
நன்மை தீமை நமக்கு புகட்டினர்

அல்லும் பகலும் அயரா துழைத்து
செல்வம் தேடி தேவை போக்கி
மல்லுக் கட்டி மதிப்புடன் பிள்ளைகள்
நல்லவராய் வளர நவின்றனர் உதிரம்

மூத்த பிள்ளை முயன்று படிக்க
பார்த்துக் கொழும்புக்கு பக்குவமாய் அனுப்பி
பட்டதாரி ஆக்கி பெற்ற பெருமை
எப்படிச் சொல்வேன் பெற்றோர் பெருமை

அன்னையும் பிதாவும் அன்பின் வடிவம்
அதுவே எமது அன்னை வடிவம்
கண்ணில் கண்ட கடவுளர் தெய்வம்
கருனையே அவர்கள் கண்டிடும் வடிவம்/‘

கமலா ஜெயபாலன்

Nada Mohan
Author: Nada Mohan

    வஜிதா முஹம்மட் சந்திர நாட்காட்டி சரித்திர வழிகாட்டி புனிதப்பட்ட மாதம் புரையோடிய பாவத்தின் மன்னிப்பு நோன்பின்நேரம் இறைகட்டளையை நினைவூட்டி மனித...

    Continue reading