சத்தமின்றி சாதனை செய்

இரா விஜயகௌரி வித்தகத்தை விரல் நுனிக்குள் வைத்தெடுத்தா படைத்தான் உரசி எழும் பொழுதெல்லாம் தடம் பதித்து சாதனை செய் குடும்பத்து...

Continue reading

கமலா ஜெயபாலன்

பெற்றோரே

தன்னலமற்ற அன்பைத் தந்தாய் தாயே
தன்னை உருக்கி தாங்கினார் தந்தையும்
என்னை மண்ணிற்கு ஈன்றனர் இருவரும்
நன்மை தீமை நமக்கு புகட்டினர்

அல்லும் பகலும் அயரா துழைத்து
செல்வம் தேடி தேவை போக்கி
மல்லுக் கட்டி மதிப்புடன் பிள்ளைகள்
நல்லவராய் வளர நவின்றனர் உதிரம்

மூத்த பிள்ளை முயன்று படிக்க
பார்த்துக் கொழும்புக்கு பக்குவமாய் அனுப்பி
பட்டதாரி ஆக்கி பெற்ற பெருமை
எப்படிச் சொல்வேன் பெற்றோர் பெருமை

அன்னையும் பிதாவும் அன்பின் வடிவம்
அதுவே எமது அன்னை வடிவம்
கண்ணில் கண்ட கடவுளர் தெய்வம்
கருனையே அவர்கள் கண்டிடும் வடிவம்/‘

கமலா ஜெயபாலன்

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் குதூகலம் கோடை வந்தாலே கொண்டாட்டம்வந்திட ஆடையும் மாறியே அழகுடன் சேர்ந்திட ஜாடையாய்பூக்களும் அணியாய் மலர்ந்திட வாடையில்...

    Continue reading