சிறகடிக்கும் நினைவலைகள்

இரா.விஜயகௌரி சிந்தனைச் சுழல் விரிய செம்மையுறும் எழில் பொழிய விந்தையென நினைவில் எழும் வீரியத்தின் சுந்தரங்கள் எந்தையும் தாயும் இணை கனவெழுதும்...

Continue reading

நெருப்பு நினைவுகள்…..

ரஜனி அன்ரன்(B.A) நெருப்பு நினைவுகள்.. 23.07.2026 இன்றையநாள் யூலை இருபத்திமூன்று அன்றைய கறுப்புயூலையின் நெருப்புநினைவுகள் கனதியாய்...

Continue reading

கமலா ஜெயபாலன்

பெற்றோரே

தன்னலமற்ற அன்பைத் தந்தாய் தாயே
தன்னை உருக்கி தாங்கினார் தந்தையும்
என்னை மண்ணிற்கு ஈன்றனர் இருவரும்
நன்மை தீமை நமக்கு புகட்டினர்

அல்லும் பகலும் அயரா துழைத்து
செல்வம் தேடி தேவை போக்கி
மல்லுக் கட்டி மதிப்புடன் பிள்ளைகள்
நல்லவராய் வளர நவின்றனர் உதிரம்

மூத்த பிள்ளை முயன்று படிக்க
பார்த்துக் கொழும்புக்கு பக்குவமாய் அனுப்பி
பட்டதாரி ஆக்கி பெற்ற பெருமை
எப்படிச் சொல்வேன் பெற்றோர் பெருமை

அன்னையும் பிதாவும் அன்பின் வடிவம்
அதுவே எமது அன்னை வடிவம்
கண்ணில் கண்ட கடவுளர் தெய்வம்
கருனையே அவர்கள் கண்டிடும் வடிவம்/‘

கமலா ஜெயபாலன்

Nada Mohan
Author: Nada Mohan