10
Jul
தாங்கமுடியவில்லை
பத்து நாட்கள் திருவிழா
பரவசமாய் முடிவு பெற
பக்தியுடன் சனங்களும்
புடைசூழ்ந்து நிற்கவே
காவடி கற்பூரச்சட்டி
அணிவகுத்து செல்ல
அம்மன் பவனிவர
அரோகரா...
10
Jul
நாடொப்பன செய்
நாடொப்பன செய்
செய்வன திருந்திடச் செய்யும் போதினிலே
நல்லென நாட்டிற்கு அமைந்த வேளையிலே
சில்லென...
10
Jul
மரணித்தவனே மறுபடி வந்தால்
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
10-07-2025
மரணத்தின் மௌனம் கலைந்து
மீண்டும் உயிர்த்தெழுவாயா?
மண்ணில் இட்ட விதை
மறுபடி...
கமலா ஜெயபாலன்
கவிஞனின் ஆயுதம்
——————————
பாரினில் பாவலர்
பாடிய பாடல்கள்
வேரினும் ஆழமாய்
வேகமாய் ஊன்றும்.
காரிருள் ஆனாலும்
கவிஞனின் எழுதுகோல்
கூரிய முனையால்
கீறிடும் வலிமையாய்/
செந்தழிழ் கொண்டு
செதுக்கிய ஆயுதம்,
சந்துகள் ஓடிச்
சரித்திரம் படைக்க,
எந்தனை ஆளும்
இன்பத் தழிழை,
வந்தனை செய்துமே
வாழ்த்தி வரைவோம்/
பாரதியரும் பரதிதாசனும்
பதமாய் ஆக்கியே,
வீரகாவியம் படைத்த
விந்தையும் கண்டோம்.
தீரமான சிந்தனையால்
தீட்டிய கருத்தும்,
காரமாகி உரைத்துடும்.
கருத்தை உணர்வாய்/
எண்ணத்தை எழுத்தாக்கி,
இதையத்தை கல்லாக்கி,
வண்ணத்தை வரிகளாக்கி,
வார்த்தைகளை தீயாக்கி
விண்ணுலகம் போற்றும்
வீரனின் எழுதகோல்.
கண்ணிற்குள் மணியாய்
காக்குமே கவிஞரை/

Author: Nada Mohan
14
Jul
செல்வி நித்தியானந்தன்
இசை
இசையோடு எல்லாம்
இவ்வுலகுஇணைத்திடும்
பசைபோல ஒட்டியே
பாரினில் சிறந்திடும்
அகிலத்தில் எல்லாமே
இசையோடு சேர்ந்திடும்
அன்றாட ...
13
Jul
சிவாஜினி சிறிதரன் சந்த கவி
இலக்கம் _195
"கோடைகாலம்"
கோடையில் வரும்
வாடைகாற்று வசந்தத்தை வரவேற்கிது
வசலில் நிற்கும் வாழையடி...
10
Jul
ஜெயம்
இசைக்கு மயங்காதோர் இவ்வுலகில் இல்லை
இசையொன்றே தாண்டிவிடும் ஜாதிமத எல்லை
இறைவனுக்கு...