கமலா ஜெயபாலன்

கவிஞனின் ஆயுதம்
——————————
பாரினில் பாவலர்
பாடிய பாடல்கள்
வேரினும் ஆழமாய்
வேகமாய் ஊன்றும்.
காரிருள் ஆனாலும்
கவிஞனின் எழுதுகோல்
கூரிய முனையால்
கீறிடும் வலிமையாய்/

செந்தழிழ் கொண்டு
செதுக்கிய ஆயுதம்,
சந்துகள் ஓடிச்
சரித்திரம் படைக்க,
எந்தனை ஆளும்
இன்பத் தழிழை,
வந்தனை செய்துமே
வாழ்த்தி வரைவோம்/

பாரதியரும் பரதிதாசனும்
பதமாய் ஆக்கியே,
வீரகாவியம் படைத்த
விந்தையும் கண்டோம்.
தீரமான சிந்தனையால்
தீட்டிய கருத்தும்,
காரமாகி உரைத்துடும்.
கருத்தை உணர்வாய்/

எண்ணத்தை எழுத்தாக்கி,
இதையத்தை கல்லாக்கி,
வண்ணத்தை வரிகளாக்கி,
வார்த்தைகளை தீயாக்கி
விண்ணுலகம் போற்றும்
வீரனின் எழுதகோல்.
கண்ணிற்குள் மணியாய்
காக்குமே கவிஞரை/

Nada Mohan
Author: Nada Mohan

    சந்த கவி இலக்கம்_215 சிவாஜினி சிறிதரன் "நல்லுறவு" பொறுமை சகிப்பு தன்மை இரண்டும் தெய்வீக குணங்கள் இதற்கு எஞ்சிய நற்குணம் ஏது...

    Continue reading

    ராணி சம்பந்தர் நாலும் சேர்க்குமே நல்லுறவு அல்லும் பகலுமே பாடுபடவே கல்லும் கனியாகும் கூட்டுறவு சொல்லும் செயலும் பல்லுறுதி கொல்லும்...

    Continue reading