இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே

இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே உள்ளமும் மகிழ்வாக ஊஞ்சலாடும் எண்ணமும் விரிந்தாட /_ கள்ளமில்லை கபடமில்லை...

Continue reading

கமலா ஜெயபாலன்

நிலவில் உலா
இன்பப் பொழுது இதமான பருவம்
துன்பம் மறந்து துள்ளிய காலம்
இன்றும் எம்முள் இனித்திடும் நினைவு
அன்று கண்ட அருமை உறவுகள்

அன்னையின் மடியில் அமரந்து இருப்பதும்
தன்னை மறந்து என்னை அனைப்பதும்
புன்னகை பூத்து புதுக்கதை சொல்வதும்
அன்னம் ஊட்டி அகமும் மகிழ்ந்ததும்

கிட்டி யடிப்பதும் கிளித்தட்டு மறிப்பது
பட்டி தொட்டியெல்லாம் பாய்ந்து ஒளிப்பதும்
முட்டி கட்டி முந்தி யடிப்பதும்
சட்டியில் குழைத்து சாதம் உண்பதும்

பாடிக் கொண்டு பம்பரம் சுற்றுவதும்
ஆடிவரும் நிலவில் ஔவையைக் கண்டதும்
தேடி நிலாச்சோறு தின்று களித்ததும்
ஓடி வரவேண்டும் ஒருநாள் எமக்கு

கமலா ஜெயபாலன்

Nada Mohan
Author: Nada Mohan

    வசந்தா ஜெகதீசன் வரலாறு பலபாகம் வழிகூறும் பலகாலம் தமிழ்ப்பள்ளி உருவாக்கம் தரணிக்கே தனிமகுடம் உறவுகள் ஓன்றாகும் உயிர்ப்பு மொழி தமிழாகும் அடுத்த தலைமுறையும்...

    Continue reading

    ராணி சம்பந்தர் இதயத்தில் ஏற்பட்ட வலி தீர உதயமாகிய தமிழ் பள்ளிகள் ஆதாயமின்றி விழி திறந்தது இடம்பெயர்ந்தே முடமாகிய வாழ்வு...

    Continue reading