கமலா ஜெயபாலன்

நிலவில் உலா
இன்பப் பொழுது இதமான பருவம்
துன்பம் மறந்து துள்ளிய காலம்
இன்றும் எம்முள் இனித்திடும் நினைவு
அன்று கண்ட அருமை உறவுகள்

அன்னையின் மடியில் அமரந்து இருப்பதும்
தன்னை மறந்து என்னை அனைப்பதும்
புன்னகை பூத்து புதுக்கதை சொல்வதும்
அன்னம் ஊட்டி அகமும் மகிழ்ந்ததும்

கிட்டி யடிப்பதும் கிளித்தட்டு மறிப்பது
பட்டி தொட்டியெல்லாம் பாய்ந்து ஒளிப்பதும்
முட்டி கட்டி முந்தி யடிப்பதும்
சட்டியில் குழைத்து சாதம் உண்பதும்

பாடிக் கொண்டு பம்பரம் சுற்றுவதும்
ஆடிவரும் நிலவில் ஔவையைக் கண்டதும்
தேடி நிலாச்சோறு தின்று களித்ததும்
ஓடி வரவேண்டும் ஒருநாள் எமக்கு

கமலா ஜெயபாலன்

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் கோடை கோடை வந்தாலே கடற்கரை மோகம் வாடை என்றாலும் எடுக்குதே தாகம் ஆடை மாற்றமும் பலரது தேகம் ஜாடை காட்டியே பூக்களின்...

    Continue reading