நட்பென்றாலே……..

ரஜனி அன்ரன் (B.A) நட்பென்றாலே.... 30.07.2026 எங்கிருந்தோ வந்த சொந்தம் எந்தஎதிர்பார்ப்பும் இல்லாப் பந்தம் இரத்தபந்தம் இல்லாஉறவு இருளில்...

Continue reading

கமலா ஜெயபாலன்

நிலவில் உலா
இன்பப் பொழுது இதமான பருவம்
துன்பம் மறந்து துள்ளிய காலம்
இன்றும் எம்முள் இனித்திடும் நினைவு
அன்று கண்ட அருமை உறவுகள்

அன்னையின் மடியில் அமரந்து இருப்பதும்
தன்னை மறந்து என்னை அனைப்பதும்
புன்னகை பூத்து புதுக்கதை சொல்வதும்
அன்னம் ஊட்டி அகமும் மகிழ்ந்ததும்

கிட்டி யடிப்பதும் கிளித்தட்டு மறிப்பது
பட்டி தொட்டியெல்லாம் பாய்ந்து ஒளிப்பதும்
முட்டி கட்டி முந்தி யடிப்பதும்
சட்டியில் குழைத்து சாதம் உண்பதும்

பாடிக் கொண்டு பம்பரம் சுற்றுவதும்
ஆடிவரும் நிலவில் ஔவையைக் கண்டதும்
தேடி நிலாச்சோறு தின்று களித்ததும்
ஓடி வரவேண்டும் ஒருநாள் எமக்கு

கமலா ஜெயபாலன்

Nada Mohan
Author: Nada Mohan