கல்லறைகள் 91

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
18-11-2025

ஆயிரம் கனவுகளோடு
அங்கலாய்த்தவரே நீவிர்
மண்ணிற்காய் மரணித்த
மாவீரச் செல்வங்களே!

சிதைந்து போன உடல்கள்
சிதறிப் போன உறவுகள்
பள்ளியிழந்த சிறார்கள்
பறித்துப் போன கனவுகள்

கதறிய இனம் கண்டு
களம் கொண்டாய் அன்று
எந்த நாடும் அணுகவில்லை
ஆண்டவனும் இரங்கவில்லை

கார்த்திகை வந்தாலே
கனத்த மாதமாய்
நெஞ்சம் பதறுது
நினைவுகள் புரளுது

வடுக்கள் பேசுது
கனவுகள் பலிக்கட்டும்
காந்தள் மலரெடுத்து
கல்லறைகள் தொழுவோம்.

Jeba Sri
Author: Jeba Sri

சிவாஜினி சிறிதரன் சந்த கவி இலக்கம் 224 "பெண்ணே" அன்புக்கு அதிபதி பண்புக்கு இலக்கணம் பாசத்தில் வரும் நேசம் பற்றுணர் வில் ஈகம்! என் நெஞ்சில்...

Continue reading