” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

கல்லறைகள் 91

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
18-11-2025

ஆயிரம் கனவுகளோடு
அங்கலாய்த்தவரே நீவிர்
மண்ணிற்காய் மரணித்த
மாவீரச் செல்வங்களே!

சிதைந்து போன உடல்கள்
சிதறிப் போன உறவுகள்
பள்ளியிழந்த சிறார்கள்
பறித்துப் போன கனவுகள்

கதறிய இனம் கண்டு
களம் கொண்டாய் அன்று
எந்த நாடும் அணுகவில்லை
ஆண்டவனும் இரங்கவில்லை

கார்த்திகை வந்தாலே
கனத்த மாதமாய்
நெஞ்சம் பதறுது
நினைவுகள் புரளுது

வடுக்கள் பேசுது
கனவுகள் பலிக்கட்டும்
காந்தள் மலரெடுத்து
கல்லறைகள் தொழுவோம்.

Jeba Sri
Author: Jeba Sri