மறக்கமுடியுமா மே 18

ராணி சம்பந்தர் முள்ளிவாய்க்கால் முனகலிலே இன்னும் எம் காதினில் ஒலிக்க மூச்சுப் பேச்சின்றி உயிருடனே மூடிய கிடங்கிலே அடங்கியதே துள்ளிக்...

Continue reading

கவிதை நேரம்-29.08.2024 கவி இலக்கம்-1905 வாழ்க்கை தத்துவம் ——————-

Jeya Nadesan

கவிதை நேரம்-29.08.2024
கவி இலக்கம்-1905
வாழ்க்கை தத்துவம்
——————–
ஒவ்வொரு நாளும் இளமை கழிகிறது
மூப்பு வந்து முதுமை கூடுகிறது
காலம் என்பது நம் கையில் இல்லை
காலத்தின் கையில் மனிதன் இல்லை
தலைமுடி நரையாகிறது பார்வை மங்கிறது
முகச் சுருக்கம் உடல் வலிமை குறைகிறது
நடக்க முடியாத நிலையில் கைத்தடி
கஸ்டங்கள் வரும் போதுதான்
கடவுளை நினைத்து நொந்து கொள்கிறது
மருத்துவமனையில் இருக்கும் போதுதான்
ஆரோக்கியம் அவசியம் நினைப்பதுண்டு
ஓடி ஓடி உழைத்து பிள்ளைகளுக்கென
நொந்து நூலாகி தெருவில் திரியும் காலம்
சொகுசான வாழ்வில் பிள்ளைகள் வாழ்வும்
ஆறுதல் சொல்ல எவருமில்லா நிலையில்
மனம் வருந்தும்படி வயதானவர்கள் ஆதங்கம்

Nada Mohan
Author: Nada Mohan